எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பல இராத்திரிகளை
எரித்து கவிதைகளாக
உருப்பெற்ற என்
உணர்வுகளை ஓர்
நூலாக்கிகொண்டிருக்கிறேன்
உறவுகளே!!
இன்னும் சில வாரங்களில்
இந்த நூல் வெளியீட்டு
விழா நடைபெற உள்ளது
குறிப்பிடத்தக்கத்து!
உங்கள் பின்னூட்டங்களாலும்
கருத்துக்களாலும்
இன்னும் என்னை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உங்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்
பல..
**************************************இதயத்துண்டு**************************************
உன் புகைப்பட
உருவம்
மொத்தமாய்
எனை புதைத்திட!!
என் விழிகள்
சிதைத்த
உன் அழகில்
சிந்தனை மெல்ல
சிதறியது!!
வாழைமர
மட்டையிலே
வழிந்தோடும்
பனித்துளியோ!!
பாவை உந்தன்
பார்வையடி!!
செங்கரும்பு
வயலினிலே!!
சீவி வைத்த
அடிக்கரும்பா!!
அடியேய் உன்
இதழ்கள்..
..
வெண்ணொளி
தெறித்த துகளெடுத்து
வெண்ணையில்
கலந்து செய்த
மெழுகாடி
உன் மேனி!!
கோரை புல்லிலே
வண்ணத்தி
சிறகடிக்கும்
சித்திரமா
சகியே உன்
இமைகள்!!!
இன்னும்!!
உன் அங்கம்
தங்கமாய்
மின்னுதடி!!
கோகினூர்
வைரமும்
தோ (...)