எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
காதல் வலிகள்..!!!!!!
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......
நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....
என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...
ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!
தோழிகளோடு (...)
அருமை தோழரே. 09-Sep-2014 11:14 pm