எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உப்பு கல்லாய் நீ இரு....
உணவு பொருட்களில் உப்பு மட்டுமே விலை குறைவு,அதே போல் நீ மற்றவர் கண்களுக்கு மதிப்பற்றவர்களாய் தெரியலாம்...
ஆனால் உப்பின்றி உணவில்லை!!
அதே போல் நீ இன்றி அங்கு உணர்வில்லை என நீ உணர்த்து...
காத்திருப்பும் கசந்து விட்டது ...
எதிர்பார்ப்பு,ஏமாற்றமாய் முடிகிறது..
இன்றாவது வருவாள் என கதிரவன் நம்பிக்கையும்,
இன்றும் கூட வரவில்லை என சந்திரனும் வருத்தம் தெரிவிக்கிறது .
என்னவாயிற்று கடந்து வரும் காற்றாவது என் அச்சத்திற்கு முற்று புள்ளி வைக்கட்டும்...
காவியங்களுக்குள் கலவரம்.
*************
உன்னைப்பற்றி கவிதை எழுத
இலக்கனம் தேடினேன் !!!
எதிரிகளான எதுகை,மோனையும்
கை கோர்த்து வந்தது.....
அடுத்த நிலை எழுத "இரட்டைகிழவி"யை அழைத்தேன்
சேர்ந்தே இருக்கும் இருவரும் எதிர் அணிகளாய் மாறின உன் அழகை பற்றி புறம் பேச.....உன்மையான கிழவிகள் போல.....................
வேறு வழியின்றி உன்னை ஒப்பிட நிலவை அழைத்தேன்...நிலவுடன் ஏற்கனவே ஒப்பிட்டதால் பழைய பகையில் வர மறுத்தது........
இறுதியாக என் அறிவுக்கேற்ப எழுத
பேனா எடுத்தேன் உன் பெயரை எழுதுவதற்குள் மையை சிந்தி விட்டது ஜொல்லாக......
இதை தான்டியும் எழுத நினைத்தால் ஏதோ ஓர் காகிதம் எனக்கு பதிலாக உன்னை தாங்குவதை நான் விரும்பவில்லை..............
உன்னை பற்றி கவிதை எழுத முடியாத கவலையுடன்...........
---ஆசி----