எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம்.
---------------------------------------------------------------------
’ சாகா மருந்து ’ எனும் கவிதையில் சித்ரா ராஜ்
அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....
சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி
அதில் கவிஞனை நிறுத்தி
மனவலிமையோடு எழுதினால் மட்டுமே
நீ கவிஞன்
தன்மான மனிதன்
என எரிச்சலூட்டி
எச்சில் ஊற்றி
பாதங்களையும்
எழுதுபவர்களின் பாக்களையும்
சீரழித்து சீழ்பிடிக்க வைப்பதா
இலக்கியத்தின் சேவை ?
வியந்து ரசித்த வரிகள்
..........................................
வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !
இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !
‘நான் தமிழன்’ எனும் கவிதையில் ’ லம்பாடி எனும் பாலா’
அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................
என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?
ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!
‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா
கனா காண்பவரின் கவிதைகள் படியுங்கள். அருமை. வித்தியாசம். தெளிவு.
(ஹய்யோ பயமா இருக்கே. புத்திரன் சத்திரன் எவராவது வந்து நீ அவரான்னு கேட்டுவிடாதீங்க)
சந்தனக்கட்டை வெட்டினாலும் சுடுறானுங்கோ
செம்மரக்கட்டையை வெட்டினாலும் சுடுறானுங்கோ.
மனுஷன்ன வெட்டினா மட்டும் கைது பண்றானுங்கோ.
சூப்பருங்கோ சூப்பரு கவர்மெண்டு லா!
இறுதி வரி வரையிலும் படிப்பவர்கள் எதையும் ஊகம் செய்திடக்கூடாது என மெனக்கெடலாக எடுத்த எழுதப்பட்ட கதை இவன் + இவள் - காதல். பரிசு பெற்று இருக்கிறது. வாழ்த்துகள் .சந்தோஷ் குமார் !
காதலுக்கு கண்ணில்லை சாட்சியாக இந்த கதை.
பெண்கள் அவசரப்புத்தியாக தவறாக கணக்கீடு செய்வதை நளினமாக சொல்லியிருக்கிறார் சந்தோஷ். ஆண்களின் பார்வையில் காதல் காதலாகவே இருக்கிறது. பெண்களின் மனதில் காதல் ஆழமாக உணர்ச்சிப்பூர்வமாக பற்றிக்கொள்கிறது. சிறிய கதைதான் பெரிய காவியத்திற்கான அடையாளமாய். அடித்தளமாய்.
சந்தோஷ் நட்பே காதலித்து இருக்கிறீர்களோ ? உணர்வுகள் எழுத்துகளில் விளையாடுகிறது.
பரிசுப் பெற்ற நட்புக்கு வாழ்த் (...)
கிருஷ்ண தேவ் கவிஞருக்கு வாழ்த்துகள்.! தேவதைகளின் தினம் பரிசு பெற்ற பட்டியலில் இருக்கிறது.
எளிய நடையில் வசியம் செய்யும் புது நடை கவிதைகளுக்கு , கவிஞர்களுக்கு இப்பரிசு உற்சாகம் தரட்டும்.
பரிசு என்று இலக்கை நோக்கி எழுதப்படும் படைப்புகள், அந்த படைப்புகளை ஆதரிக்க கோரி எழும் கோஷங்கள் பிரச்சாரங்களால் கவிஞர்களின் இலக்கிய அந்தஸ்து குறைகிறது. ஒருவர், கருத்து பதிவிடுதல் எனும் நோக்கில் ஒவ்வொரு படைப்பிலும் தயாரிக்கப்பட்ட ஒரு விளம்பரத்தை ஒட்ட வைத்து செல்கிறார். எனது படைப்புகளில் என்றல்ல, அனைத்து கவிஞர்களின் படைப்பிலும். இவ்வாறு வலுக்கட்டாயமாக பார்வையிட வைப்பதுதான் அவரின் நோக்கம் அன்றி அவர் கவிஞர் என்பதன் பெருமிதத்தை அவரிடம் காண இயலவில்லை.
படைப்பு ஒன்றுக்கு அருமை என கருத்திடுபவர் ஒரு மதிப்பெண் இடுகிறார். விமர்சனம் என்ன என கேட்டேன். இல்லை மூன்று மதிப்பெண் இட்டேன் என வாதாடுகிறார். கணக்கு த (...)
இது கவிதைக் களமா? தேர்தல் களமா? வாக்களிக்க வேண்டி வேட்பாளர் ஒருவர் தொடர் படையெடுக்கிறார் அஞ்சல் மூலமாக.
வாக்கு அளிப்பது எப்படி ?
அறிந்தாலும் , நோட்டாவுக்கே என் வாக்கு.