எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு
**********
தென்னகத்தில் மலையாளிகள், கன்னடர்கள் தெலுங்கர்கள் ஆகியோருக்கும் தாய் மொழிப் பற்றும் (மொழி சார்ந்த) இனப்பற்றும் தமிழர்களில் பெரும்பாலோர்க்கு கிடையாது. தமிழர்களில் பெரும்பாலோர் அவர்களது பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர்களே இதற்கு தக்க சான்று.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவுடன் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை நினைத்தால் தமிழுணர்வு உள்ள அனைவரும் கூனிக் குறுகி வெட்கப்படும் அவல நிலை. குறைந்த பட்சம் எதிர் கட்சித் தலைவர்களாவது ஒன்றுபட்டு தமழக விவசாயிகளின் ந (...)
சுற்றுப்புறச் சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டாசு, மத்தாப்பு, புஸ்வானம் போன்ற வெடி பொருட்களைப் பயன்படுத்துவது தேவையா?
இயற்கையைப் பேணும் எண்ணம் உள்ளோரே, மனிதர்களையும் வீட்டு விலங்களையும் பறவைகளையும் அச்சுறுத்தும் வெடிகளை வெடிப்பது ஏற்புடைய செயலா?
இயற்கைக்கு எதிரான எந்தக் கொண்டாட்டமும் தமிழர் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கும் ஒவ்வாத செயல்கள் என்பது நம் மனச்சாட்சியை உறுத்தட்டும்.
பட்டாசு வெடிகளை மறப்போம். மனிதர்களின் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றி சிந்திப்போம்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் அணைகளும் இநதியர் அனைவரைக்கும் சொந்தமானவை.
அவற்றையெல்லாம் தேசியமயமாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி; பல மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு. இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்தால் வறட்சியின் கொடுமையால் ஏற்படும் பட்டினி, தற்கொலை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
நதிகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கால் ஏற்படும் உயிர்ச் சேதங்களையும் பயிரச் சேதங்களையும் தவிர்க்கலாம்.
கோடீஸ்வரர்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏழைகளின் துன்பங்கள் புரியுமா?
எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் அரசியலுக்கு வருவதால்தான் நாட்டில் பல சீர்கேடுகள்.
(...)
நாகரிகம்
#######
நாகரிகங்கள் யாவும்
அழகைக் கெடுக்கத்தான் உதவும்!
நாம் பெற்ற முகத்திற்கு
மெருகூட்ட கொஞ்சம்
ஒப்பனை தேவைதான்
என்றாலும்
இயற்கை அழகைக் கெடுத்துக் கொள்வதில் அலாதி ஆர்வம்
கொள்கிறார்!
மூதுரையின் பொருளறியாத்
திரைச் சுவைஞர்களே,
அழகைக் கெடுத்துக்கொள்ளும்
சூனியத்தை
ஆனந்தம் பொங்க வரவழைப்பார்! கைகளின் இயற்கை அழகை
கோலமில்லா உங்கள்
ஒப்பிட்டுப் பார்த்து
நதி நீர் பிரச்சனை.
நமது அண்டை மாநிலங்களோடு நமக்குள்ள நதி நீர் பிரச்சனைகளை தமிழக அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கவேண்டும் என்று கோருவது நியாமானது தான். அதே சமயம் தமிழக விவசாயிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகளும் எதிர் கட்சிகளின் உறுப்பினர்களும் கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுளின் முதல்வர்கள், நீர்ப்பாசன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும்.
மஞ்சள் காமாலை நோய் தீர்க்கமுடியாத நோய் அல்ல.
சில நோய்களுக்கு மூலிகைகள் தான் பக்கவிளைவில்லா சிறந்த மருத்துவம். நான் சினிமா ரசிகன் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சினமா பார்ப்பதில்லை.
தமிழ் உணர்வு உள்ளவர்
தலை நிமிர்ந்து
நிற்கமுடியாது.
கண்ணகியை இழிவு செய்யும்
தமிழர்களும் உள்ளார்!
செம்மொழியாம் நந்தமிழை
புறக்கணிக்கும்
தமிழர்களும் உள்ளார்.
அய்யன் திருவள்ளுவரின்
உலகப் பொதுமறையை
மதிக்காத
தமிழர்களும் உள்ளார்.
பச்சைத் தமிழனாய்
பிறந்தமைக்கு நான்
வெட்கப்படுவதா?
வேதனைப்படுவதா?
தாய்மொழிப் பற்றில்லா
தமிழரெல்லாம்
திரைத் தமிழைப் பேசி
சீரிளமை குன்றாநம்
செம்மொழியைச் சீரழிப்பதை
தவிர்த்து
பிறிதொரு மொழியில்
பேசலாமே!
இந்த ஆண்டை துன்முகி ஆண்டு என்கிறார்கள. துன்முகி -யின் அர்த்தம் என்ன?
முதல் மரியாதை மொழிக்குத்தான். மொழியின் வழி தான் நாம்
உயர்ந்த நிலையையும் அடைய முடியும்.
நம் வாழ்வின் அனைத்து சிறப்புகளையும் மொழியின் வாயிலாகத்தான் பெறுகிறோம்.
ரஜினிக்கு விருது: மகாராஷ்டிர அரசுக்கு பாஜக கோரிக்கை
--------------
சிவாஜி கெய்க்வாட் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஜினிகாந்த், மகாராஷ்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
திரைப்பட ரசிகர்கள் அவரை தெய்வீக மனிதராக கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு அனில் கோட்டி பேசினார்.