எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த ஆண்டு எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் பரிசு நீங்கள். ஒவ்வொரு கிறிஸ்துமஸும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அதில் ஒரு பகுதியாக இருப்பதால் நண்பரே.  இந்த கிறிஸ்துமஸிலும் மற்ற எல்லாவற்றிலும் உங்களுக்கு அமைதி, நல்லெண்ணம் மற்றும் மகிழ்ச்சி! ஆண்டின் மிக அற்புதமான நேரத்தின் மிக அற்புதமான பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது, அதற்கு நீங்கள் ஆதாரம்.  “கிறிஸ்துமஸ் என்றென்றும் - ஒரு நாள் மட்டுமல்ல. ஏனென்றால், நேசிப்பதும், பகிர்வதும், கொடுப்பதும் தள்ளிப் போடுவது அல்ல. 'ஜாலியாக இருக்க வேண்டிய பருவம், ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்! இந்த ஆண்டு சாண்டா உங்களுக்கு நல்லது என்று நம்புகிறேன்! குளிர்காலத்தின் குளிர்ச்சியைத் துரத்தும் ஒரு வசதியான கிறிஸ்துமஸ் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு அற்புதமான கிறிஸ்துமஸுக்கு அன்பான எண்ணங்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள். அமைதி, அன்பு, செழிப்பு எப்போதும் உங்களைத் தொடரட்டும்.  மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்கள், எங்கள் குடும்பத்திலிருந்து உங்களுக்கு, இந்த கிறிஸ்துமஸ் மற்றும் ஒவ்வொரு நாளும்.
கிறிஸ்மஸின் உண்மையான ஆவி உங்கள் இதயத்தில் பிரகாசிக்கட்டும் மற்றும் உங்கள் பாதையை ஒளிரச் செய்யுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பிரகாசமான ஒரு பருவம் வாழ்த்துக்கள்! கிறிஸ்துமஸ் நேரத்தில் உங்களுக்காக: மகிழ்ச்சி, அரவணைப்பு மற்றும் அன்பிற்கான ஆசை. இந்த பருவம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒளி மற்றும் சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். "கிறிஸ்துமஸைப் பற்றிய எனது யோசனை, பழங்காலமாக இருந்தாலும் சரி, நவீனமாக இருந்தாலும் சரி, மிகவும் எளிமையானது: மற்றவர்களை நேசித்தல்." - பாப் ஹோப் இனிய கிறிஸ்துமஸ், உங்கள் கிறிஸ்துமஸ் வெண்மையாக இருக்கட்டும்!  கிறிஸ்துமஸ் மற்றும் எப்போதும் உங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிபந்தனையற்ற அன்பை விரும்புகிறேன்.



மேலும்

எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,  ஆன்னி  சனான பெயரால்  இங்கு கூடியிருக்கும் எங்கள் அனைவர் மீதும் உமது ஆவியை பொழிந்தருளும்.  விசேஷ விதமாக  இன்று ஆன்னி  சனானவை ஆசிர்வதித்து உமது தூய ஆவியால் அவரது உள்ளத்தையும், இல்லத்தையும் நிரப்பும். உலக வாழ்வின் மறுதல்களுக்கிடையில் உம்மில் அதிக விசுவாசத்தையும், நம்பிக்கையையம் வைக்கவும். உமது அளவில்லா அன்பை சுவைத்து உணரவும் அருள் வழக்கும். 

அன்பே உருவான இறை ஏசுவே, உமது அன்பில் எங்களுக்கு பங்களிக்க இவுலகில் ஒரு மனிதனாக பிறந்து, மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து எங்களை வாழவைக்க தந்தையின் சித்தப்படி மறித்து , முன்றாம் நாள் உயிர்த்தெழுந்திர். எங்களுக்கு எத்தனையோ நன்மைகள் செய்துவருகிறீர். அவைகள் அனைத்திற்கும் நன்றி செலுத்துகிறோம்.  இன்று ஆன்னி  சனானவை அன்புடன் அரவணைத்து ஆசிர்வதித்தருளும். வயதிலும், குணத்திலும், ஞானத்திலும் உமது அருளிலும் வளர்ந்து, உமக்குள்   என்றென்றும்  வாழ்ந்து ஊழியம் செய்ய அருள் தாரும். 

 பரிசுத்த ஆவியே இங்கு கூடியிருக்கும் எங்கள் ஒவொருவர் மீதும்  எழுந்தருளி வாரும். உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை எங்கள்மீது வரவிடும்.  கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே,  எங்கள் இதயங்களின்  இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே,  எங்கள் இன்னல்களின் தேற்றரவே எழுந்தருளி வாரும். 

இந்நன்னாளில் ஆன்னி  சனான பெயரால்  வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற  அவரது பெற்றோர்கள், சகோதரன் சவுல், பெரியப்பா, பாட்டி , தாத்தா, சித்திகளின் குடும்பத்தினர், மற்றும் இங்குள்ள உறவினர் அனைவரையும் ஆசிர்வதித்து  எங்கள்   இதயங்களை  உமது அருளால் நிரப்பும்.  எங்களுக்கும்,  சிறப்பாக  ஆன்னி  சனானவுக்கும் உம்முடைய திருக்கொடைகலையும்,    அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், போன்ற  நற்கனிகளையும்  தந்தருளும். 
 
உமது  அளவில்லா அருளையும், அன்பையும்   அளித்து இந்த இரு பெருங்கொடைகளால் எங்கள் வாழ்வு ஒரு புனிதமான வாழ்வாக அமைய  எங்கள் இதயம் நிறைந்த நன்றியோடு  வேண்டிக்கொள்கிரோம்.  

எங்கள் எல்லோரையும்  ஒருமனமாக்கும் இந்த வைபவம் எங்கள் வாழ்வை உமது  பாதங்களில் காணிக்கையாக அர்ப்பணித்து  நன்றி செலுத்தி எங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கவே வாழ அருள் தருமாறு  உம்மை மன்றாடுகிறோம்.   பொறுமையும் தாழ்ச்சியும் பிறரன்பும், இரக்கமும், தியாக உள்ளமும் எங்கள்  வாழ்வின் அணிகலன்களாக விளங்க  செய்விராக.

 இன்பத்தை ஏற்பது போன்றே, எங்களுக்கு  வரும்  துன்பத்தையும் ஏற்று இறைவனாகிய உமது   திருவுளத்துக்கு பணிந்து,  அதனை புனிதமாக்கிட மன உறுதியை எங்களுக்கு  தந்தருளும். இறையன்பில் நிலைத்து நின்று, எங்கள் அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திட செய்விராக. திருகுடும்பத்தை  பின்பற்றி  உமது  திருவுளத்தை நிறைவேற்ற உதவி செய்தருளும்.  ஆமென்.

மேலும்

 இங்கு நலம். உங்கள் நலமறிய ஆவல். நீங்கள் அனுப்பிய சிக்கலான வார்த்தைகள் கிடைத்தன. மிகவும் பொறுமையாகத்தான் படித்தேன். ஆனால் எனது பொறுமையை விலைக்கு  வாங்கிவிட்டது . 

 "இந்த msg நீங்க யார best & close friend ah  நினைக்கிர்களோ அவர்களுக்கு  அனுப்புங்க.நான் உங்களோட best friend ah இருந்தா எனக்கும் அனுப்புங்க.. " 
மேலே உள்ள வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டேன்.  இதைமட்டும்  உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனெனில் நீங்களும் ஒரு best friend. 

 அன்பே உருவான தனராஜ்இ, அல்போன்சா, நான் இந்த  கடிதத்தை உங்களுக்கு எழுதுவதில் மிகவும்  எனக்கு சந்தோஷமமும்  மகிழ்ச்சியும்  கிடைக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நான் கடவுள் அருளால் நன்றாக இருக்கிறேன். இந்த கடிதத்தின் மூலம் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். இயேசு தம்முடைய ஆசீர்வாதங்களைக் உங்களுக்கு கொடுப்பார். அவரின் பிறப்பு உங்களுக்கு வரும் கஷ்டங்களையும் , தீமைகளையும் ஆகட்டும் மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் தருகிறார்.  

மேலும்

அன்பே  கடவுள்! 

இயற்கையின் அழகில்   
அதைப்படைத்த   
இறைவனைக்காணலாம்  
அன்புடையோர் உள்ளத்திலும்    
 அதைப்படைத்த 
இறைவனைக்காணலாம்  
எங்கே அன்புள்ளதோ 
அங்கே கடவுளும் இருக்கிறார்.
ஆகையால் கடவுளைத் தேடி  
அலையவேண்டிய   அவசியமில்லை
அன்பு செய்க! கடவுளை காண்க!   


மேலும்

எனது அற்பன வாழ்கை மக்களுக்கு உதவியாக இருக்கட்டும். மக்களின் மத்தியில் இறைவனை காண்பேன். அவர்களுடைய நலனுக்க பாடுபடுவேன். நான் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்கிரோனோ அவைகளெல்லாம் இறைவனுக்கே செய்கிறேன்.

மேலும்


மேலே