எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 மொழியறிவு
              
யாம் ஏதோர்மொழி அறியாவிடில் என்ன
செய்திருப்போம் மனிதனாக, 
கற்பனை செய்யவில்லை, அது முடியவுமில்லை 
மொழி கற்பிக்கப்பட்டமையால்... 

மொழிகள் ஆயிரமாம் ஆயிரம்!
தாமே தோன்றினவா? அல்லது தோற்றுவிக்கப்பட்டனவா?  
மொழி கற்பித்தவன் இறைவனா? இலக்கியனா? 
உண்மை உணர்ந்தால் இறைவன் ஒருவனே!
 

பாரதத்தில் ஆயிரம் என்றால் 
பாரெங்கும் எத்தனையோ ?
எழுத்துகளுள் மீச்சிறு மீப்பெரு ஒலிகள்! 
இது அறிவியலா? அதிசயமா? 

பித்தம் பிடிப்பதுபோல் இருந்தாலும்  
மொழிகளின்பால் பித்து பிடித்தவர்கள் ஏராளம்.
 பன்மொழி கற்றவர்கள் ; பண்பாடு காப்பவர்கள். 
கடல்கடந்து சென்றவர்கள்; பல்கலை வளரச்செய்தவர்கள்..... 

மேலும்


மேலே