எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள் அதிகம் பேசுபவனும், அக்குறைகள் பேசுபவனின் பேச்சை கேட்டுக்கொண்டு கொண்டு நடக்க நினைப்பவன் என இருவரும், முன்னேற வாய்ப்பேதும் இல்லாமல் வீணாக போவர்.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் 99 % உறுதி செய்யும் நூல் வெளியீடு வரும் 14 / 04 / 2019 அம்பேத்கர் பிறந்த நாளில்...படைப்பு வீ .ர.சதிஷ்குமரன்
வணக்கம்: தொடர்ந்து அதிகரித்து வரும் செய்ன் பறிப்பு சம்பவங்கள்,அதனால் பெண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல், செயின் பறிப்பு முயற்சியின் போது பெண்களுக்கு ஏற்பாடு காயங்கள்,உடல் உபாதைகள், என பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ஆடம்பரம், மற்றவர்களின் பார்வை மெச்சுதல், பணக்காரர் என்கிற தோற்றத்தை காட்டுதல் முதலியன தான்...பெரும்பாலும் செயின் பறிப்பு என்பது பெண்கள் அழகிற்கு அணியும் செயினை பறிப்பதை விட, மாங்கல்ய மஞ்சள் கயிறுக்கு பதிலாக அணியும் தாலி சரடு செயின் தான் அதிகமாக பறிக்கபடுவதும்,பறிக்க முயற்சிப்பதுமாகும். பல சமயங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது பற்றியும்,முயற்சித்து தோல்வி அடைந்தது பற்றியு (...)
காஞ்சீபுரம்,சென்னை,திருச்சிராப்பள்ளி,விழுப்புரம்,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்காக 12 அரசு விடுதிகளை 25/06/2014 அன்று திறந்து வைத்து மக்கள் நல அரசு என்பதை தொடர்ந்து நினைவுபடுத்தியும், செயல்பட்டும் வருவதற்கு உள்ளம் கனிந்த பலகோடி நன்றிகள்.... மற்றும் தற்போது பெண்களுக்கென்று தனியாக இயங்கும் 300 பேருந்துகள் உள்ளிட்ட பெண்கள் நல பாதுகாப்பு திட்டங்கள் மென்மேலும் தொடரவும் அம்மா உணவகம் போல பெண்கள் பாதுகாப்பு அரசு விடுதி திட்டம் புகழ் பெறவும் இப்பணி மேன் மேலும் தொடரவும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை மீறிய செய்கைகள் உள்ளிட்ட பல தவறுகளை செய்ய வைத்தது, மேலும் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உயிர் நண்பன (...)
அதிக பட்சமாக சமூக சேவையிலே ஆர்வம் காட்டிவரும் ஒரு நண்பரும், அவருடன் அவ்வபோது சொந்த பணிகளை முதலிலும் சமூக பணியை இரண்டாம் பட்ச வேலையாக பார்க்கும் மற்றொரு நண்பரின் மனைவியிடமிருந்து பொங்கலன்று தொலை பேசி அழைப்பு சமூக சேவையை முதல் பணியாகவும் மற்ற வேலையை இரண்டாம் பட்சமாகவும் செய்துவரும் நண்பரின் மனைவிக்கு வந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் பிறகு தொலைபேசியில் அழைத்த இரண்டாம் நண்பரின் மனைவி இன்று முழுவது என் கணவர் வீட்டிலேயே இருக்கும் படி கூறியிருக்கிறேன் அவரும் சரி என்று கூறி வீட்டில் உள்ள துப்புரவு பணிகளையெல்லாம் செய்து வருகிறார் என்று கூறி சற்று வேறுப்பெற்றியுள்ளார்.
இதை கேட்ட உடனே சற்று கோபத்துடன் (...)
இவ்வளவு தந்து மற்றும் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு அரசு இலவச ஆங்கில அகராதி தர முன் வரவேண்டும்
இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம்,துப்புரவுக்கும் கொடுக்க வேண்டும் முகப்பு முக்கியத்துவம்
மாண்புமிகு எழுத்தே, எழுத்துதளமே நீ நினைத்தால் பேனா முனையை விட வேகமாக திட்டங்களை உருவாக்க மற்றும் சட்டமாக்க முடியும். இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம். ஆகியவற்றை நீண்ட நாள் எழுத்து முகப்பு பகுதியில் வைத்து முக்கியத்துவம் கொடுத்தது போல.. பிறந்த குழந்தையின் கழிவைகூட இடதுகையில் துடைக்கவும், துர் நாற்றமாகவும் நினைக்கும் இவ்வுலகில், பெற்று வளர்த்து பெரிய ஆளாக்கிய தந்தை,தாய், யாராகினும் முதுமை பருவத்தில் அவர்களின் மலத்தை துடைக்கவும், அவர்களின் உடலை துடைக்கவும் கூட இவர்களை பயன் படுத்த நினைக்கிறோம். அனைவரின் கழிவு (...)