எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேசம் 
காரணமற்ற நேசம்தான் நிலையானது .ஒரு காரணத்துக்காக வரும் நேசம் அக்காரணம் இல்லாமல் போகும்போது மறைந்துவிடும் .அழகு ,பணம் ,பதவி என்று ஏதோ ஒன்று நம்மை கவர்கிறது .நேசம் அல்லது காதல் துளிர்க்கிறது .அவை இல்லாவிட்டால் அவரை நேசிப்போமா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள் .ஆம் என்றால் உங்கள் நேசம் நிஜம்தான் .இல்லை என்றால் அவரை அப்போதே மறந்துவிடலாம் .உங்களுக்கானவர் அவரில்லை .
சரியான ஒருவருக்காக காத்திருக்கலாம் உங்களுக்கு உண்மை பிடிக்குமெனில் !

@இளவெண்மணியன் 

மேலும்

அன்பு மேகத்தைப் போல; எல்லாருக்கும் பொழியும் .
காதல் கடவுளை போல ;
தவத்திற்கு மட்டுமே தரிசனம் தரும் .

மேலும்

அன்பினால் சாதிக்க முடிவதை புறக்கணிப்பால் சாதிக்கமுடியாது .எதிர்பார்ப்புகளற்ற அன்பு எதிர்பார்க்காதவற்றை யெல்லாம் தரும் .மறக்க முயன்றும் முடியாத அன்பு நிஜமானதாகத்தான் இருக்கமுடியும் .அன்பில் கரைந்து காணாமல் போவதில் உள்ள சுகம் வேறெதிலும் இருக்கமுடியாது .



மேலும்


மேலே