எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அனைவருக்கும் வணக்கம், வேலை நிமித்தமாக என் படைப்புகளை தளத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை ,
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பர்களே
நேபாளத்தில் காலநிலை முன்னேறி வருவதால், எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து ஹெலிக்காப்டர்கள் மூலம் அங்கு சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மலையேறிகளை மீட்கும் முதல் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அப்பகுதியில் பெரிய அளவின் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அங்கு விரைந்து சென்று சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை வேகம் பிடித்துள்ளது என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் பனிப்புயல் காரணமாக எவரெஸ்ட் மலையடிவாரத்தில் குறைந்தபட்சம் 18 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு ஏற்பட்டுள்ள நெருக்க (...)
ஞாயிறன்று பிற்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழையால், பெஷாவர் நகரிலும் அதைச் சுற்றியுள்ள உள்ள மாவட்டங்களிலும் மரங்கள் வேருடன் வீழ்ந்தன.
ஏராளமான வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.
இந்தக் கடும் புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானோர் சிறார்கள்.
பாகிஸ்தானின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள புயல்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தப் புயல் உள்ளது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெஷாவர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மேலும் அதிக மழைக்கான வாய் (...)
நேபாள பூகம்பம் ..
பூகம்பத்தின் மையப்பகுதியை நோக்கி மீட்பு பணியாளர்கள் செல்லத்தொடங்கியுள்ளனர். சில வீதிகள் தற்போது தடைகள் அகற்றப்பட்டுள்ள திறக்கப்பட்டுள்ளன
காலநிலை சீரடைந்துள்ளதால், இமயமலையின் அடிவார முகாமில் அகப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
குடிதண்ணீர் விநியோகம் மிகவும் அவரசரமாக தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களும், பிணங்களுக்கான பைகளும் கூடத் தேவைப்படுகின்றன
பூகம்பத்துக்கு பின்னரான பல அதிர்வுகள் தாக்கியதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு செல்லாமல், தெருவோர கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3300 ஐயும் தாண்டிவிட்டதாக கூறும் அதிகாரிகள், ஆனாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்காக மன்றாடுவோம் நண்பர்களே