எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரே... எனது உயிரினும் மேலான இனியவளே...


என்றும் கருவிழிகள் துள்ளி குதித்து, 
பார்வையால் மனதைக் கவரும் உனது கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்து 
கண் மை கலைவதைக் கண்ட 
எனது கண்கள் பார்வை இழந்து கருமையான கண் மையைப் போன்று உலகம் இருண்டதடி... 

எப்பொழுதும் உன் குளிர்ந்த ஈர உதடுகள் 
அழுது அழுது வறண்ட இருப்பதைக் கண்டு 
என் உதடுகள் பாலைவனமாய் மாறியதடி... 

வசீகரமான சிரிப்பால் மற்றவர்களைக் கவர்ந்த 
உனது முகம்
சோர்ந்து இருப்பதைக் கண்டு 
எனது முகம் வாடிய மலரானதடி...  

நீ  மன அமைதி இல்லாமல்  இருப்பதைக் கண்டு
உயிர் இருந்தும் இதயம் துடிப்பதை மறந்து போனதடி...  
ஆனந்தம், மகிழ்ச்சி, சிரிப்பு, இன்பம்  மறந்தேனடி...
மூச்சு இருந்தும் சுவாசிக்க காற்றைத் தேடவில்லையடி... 
கால்கள் இருந்தும் நடக்க விரும்பாமல் ஊனமானதடி...... 
அருவியில் விழும் நீரைப் போன்று 
இனிமையாய் பேசும் உன் உதடுகள் பேசாமல் இருப்பதைக் கண்டு 
என் உதடுகள் யாரிடமும் பேச விரும்பாமல் ஊமையானதடி..... 

எதையும் நேர்மறையாய் எடுத்து கொள்ளும் 
நீயே எதிர்மறையாய் நினைத்தால் நான் எங்கே போவனடி...  
யாரிடமும் துணிவாய், வெளிப்படையாய் 
பேசும் நீயே இப்படி மெளனமாய் இருக்காலமா.... 
புத்துணர்ச்சியின் உருவமாய் இருந்த 
நீயே சோர்வடைந்து போகலாமா... 
எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் குணம் உன்னில் எங்கே போனதடி.... 

துன்பங்களை பகிர்ந்த அந்த தருணங்கள்..... 
கருவறை தொடங்கி இன்றுவரை காணாத துன்ப தருணங்களடி...... 
மனம் உருகி இறைவனிடம் வேண்டுகிறேன் உனது துன்பங்களைப் போக்கிட.......... 
துன்பங்களை மறந்து உன் முகத்தில் மகிழ்ச்சியை காணும் அந்த தருணங்கள் 
என் வாழ்வில் குழந்தை கருவறையில் இருந்து வெளி வந்து 
தன் தாயைப் பார்க்கும் தருணங்களைப் போன்றதடி.... 
காத்திருக்கிறது....  
எனது உதடுகள் உன்னுடன் உரையாட... 
காத்திருக்கிறது.... 
எனது இரட்டையர்கள் உனது தேன் போன்று இனிக்கும் குரலைக் கேட்பதற்கு... 
காத்திருக்கிறது….. 
எனது கண்கள்.... 
ஏன்னென்றால் உன் மேல் நான் வைத்திருக்கும் 
காதலும், அன்பும் கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும்  என்பதால்.......                      

மேலும்


மேலே