எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சோகத்தை சொர்க்கமாக்கி வாழுற எனக்கு சொந்தமிருந்தும் சொல்லிக்க யாருமில்லை,... (கௌரி சங்கர்)
04-Nov-2017 2:48 pm
சோகத்தை சொர்க்கமாக்கி
வாழுற எனக்கு
சொந்தமிருந்தும்
சொல்லிக்க யாருமில்லை,
அன்னையிருந்தும்
அன்பிற்காக ஏங்குகிறேன்,
தந்தையிருந்தும்
பசிதாகத்தில தவிக்கிறேன்,
அன்னை இல்லத்தில பிறந்தேன்-
இப்ப அனாதை
இல்லத்தில இருக்கிறேன்,
புத்தாடை உடுத்தியதில்லை
ஒருவன் உடுத்திய
ஆடை உடுத்தியிருக்கிறேன்,
நான் அனாதை என்றால்
கடவுளும் அனாதையே
நீ அழாதையே............
- கௌரி சங்கர்
நான் நான் கண்ட கனவு இதுவென
அதுவாய் இருக்க -
இனிது இனிதாய் சேர்ந்த
இம்சைகளெல்லாம்
இம்மாத்திரத்தில்
நினைத்தால் கண்ணீரில் கல்லறை தெரியும் ,
அன்பால் சந்தித்த அவமானங்கள் ,
புன்னகையால் புன்பட்ட புருவங்கள் ,
அனைத்கையும் இழந்தேன் ;
என் ஆன்மாவை தொலைத்தேன் ,
தேடினேன் - ஆன்மாவை அல்ல
ஆண்டவனை
என்னை படைத்த ஆண்டவனை………
- கௌரி சங்கர்
காதல் சந்தோசத்திற்காக அல்ல உன்னை சன்யாசியாக்குவதற்காக.......... - கௌரி... (கௌரி சங்கர்)
01-Nov-2017 12:08 am