எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் யார் ?


புதுமைப் பெண்ணாக வாழ நினைக்கும் 
என்னை - முட்டாள் என்கின்றார்கள் 

இளகிய இதயம் கொண்ட என்னை - 
ஏமாளி என்கின்றார்கள் 

உண்மைகளை கூறினால் என்னை -
அதிக பிரசிங்கி என்கின்றார்கள் 

கொஞ்சம் ஓய்வெடுத்தால் என்னை -
சோம்பேறி என்கின்றார்கள் 

ஆதரவற்றோருக்கு உதவி செய்தால் என்னை -
செலவாளி என்கின்றார்கள் 

உலகம் உருண்டையானது என்பது கூட 
தெரியாத இவர்கள் 
நான் யார் என்பதை மட்டும் 
தெரிந்து கொள்ளவா போகின்றார்கள் ?????? 

மேலும்

யதார்த்தம் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா என 
சிறுவயதில் கற்பித்துத் தந்த என் அம்மா 
நான் வளர்ந்ததும் ; ஜாதி விட்டு 
காதலிக்கும் போது
வெடிக்கின்றாள் எரிமலையாக......

மேலும்


மேலே