எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசான் என்றே அடைமொழி உடையோர்....
அறிவின் புதையல் அடியேன் கொண்டோர்.....
குழப்பம் கண்டு குழையும் இடத்தில்....
வழியைவகுப்பர் வெற்றியின் தடத்தில்....
அழியா செல்வம் இவரிடம் உண்டு....
அள்ளித்தருவார் அவர் அவர் திறமைகள் கண்டு....
சிறு சிறு சுண்ணக் கட்டிகள் இரண்டு...
கரு  கரு பலகை ஒன்றே கொண்டு...
அறிவை தீட்டும் ஆயிரம் யுக்திகள் இவரிடம் உண்டு‌‌....
ஏற்றம் தோற்றம் எதுவும் இல்லை...
வகுப்பின் உள்ளே பகுப்புகள் இல்லை...
அனைவரும் அங்கே குருவின் பிள்ளை...
காலம் கடந்தும் அழியாச்செல்வம்....
கல்வியால் இங்கே உலகினை வெல்வோம்....☺️




மேலும்

நாட்கள் நகர்ந்திடினும்...

நாட்குறிப்புகள் நாடித்துடிப்புகளாய்...
நகர்வலம் வருகின்றனவே....

மேலும்

☺️நான்முக பிரம்மன் கண்டெடுத்த....
🍯தேன்முக தேவி இவள்....
👩‍👧தாய்முகம்  தான் சிரிக்க....
🌎தரணி வந்த தாமரை இவள்....
ஆடித்திங்கள் ஆளவந்த...
அதிசயத்தின் அற்புதம் இவள்..‌.
🌝பௌர்ணமி நிலவின் பால் நிறம் பறித்து...
குளிர் கால குயிலின் குரல் நனைத்து...
துளிர் விட்ட தாரகை இவள்....😊
அருவிகள் துருவம் மாறி...
கருவிழி கண்ணருகே புருவமாய் புனைந்த பூங்கொடி இவள்...
வாழ்வினில் வசந்தம் கூட...
☺️தோல்விகள் தூரம் போக....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🍫 🤓

மேலும்


மேலே