எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தோழமைகளுக்கு ,
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத்து தளத்திற்கு வந்திருக்கிறேன். தொழில் மற்றும் குடும்ப சூழல்கள் காரணமாக இவ்வளவு நாள் தலைகாட்டவில்லை. இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். சோகங்களிலும், வலிகளிலும் எழுதுவது போல ஆறுதல் அளிப்பது வேறென்று உண்டா எனத் தொியவில்லை...
உணவுகளில்
சுவை மிகுந்த உணவு
எதுவென்றால்
உழைத்து களைத்து வரும் துணைவனுக்காக
பிரியமாய் சமைத்து
பேசி சிரித்து
புன்முறுவலுடன் பரிமாறப்பட்டு
ஒன்றாக அமர்ந்து
உண்ணப்படும் உணவே
அது பழைய ரசமும் துவையலுமாக இருந்தாலும் கூட
வெயிலையும் வயதையும் பொருட்படுத்தாது உழைக்க சொல்கிறது, வறுமையிலும் வேலை நிறுத்தம் செய்ய தொியாத வயிறு...
சோரென பெய்யும்
மாலை நேர
மழைச்சாரலில் நனைந்தபடி
ஏதோ டீ கடையில் ஒதுங்கிய போது
இளைய ராஜாவின்
பழைய ராகமொன்று
செவிகளை நனைத்திடும் வேளையில்
சிலரது மனதோடு
அழகி தனலட்சுமிகளும்
ஆட்டடோகிராப் மல்லிகாக்களும்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்
அழிந்து விடும் என்று தொிந்தும் மனம் அதையே கேட்டு அடம்பிடிக்கிறது....
செல்வம்,
இளமை
,இம்மை
கோபம் கொண்டவளே
உன் கோபத்தை வாா்த்தையிலே திட்டிவிடு
விழிகளால் வெளிக்கொணராதே.
உன் கண்ணீரை காணும் சக்தி இல்லை
என்னிடத்தில்
குற்றமற்ற கண்களும்
மாசற்ற மழைலை முகமும்
கபடமற்ற சிாிப்பையும்
காணுகையில் துன்பங்கள் அணைத்தும் கரைந்தே போகிறது.
கடைகள் தோறும் தேடிவிட்டேன்
நிம்மதி தரும் மருந்தை தேடி......
வீதிகள் தோறும் தேடுகிறேன்
போதி மரம் எங்காவது கிடைக்காதா என்று
மனைவி- எந்த நேரமும் இந்த கருமம் புடிச்ச பேஸ்புக் தானா?
கணவன்- அட போடி , பேஸ்புக்ல நான் என்ன ஸ்டேடஸ் போட்டாலும் 100 லைக் மேல விழும் தொியுமா?
மனைவி - ஓ........ஒரு ஐம்பது லைக்க கொடுத்து ஒரு கிலோ அாிசி வாங்கிட்டு வாங்க.....
கணவன் - ??????