எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நான் எழுத்து தள நண்பர்களின் விண்ணப்பத்தை ஏற்பதும் அளிப்பதும் அவர்களது படைப்பை படித்து மகிழவே ...சாட்டிங் ல் எனக்கு விருப்பம் இல்லை ...எனது மணித்துளிகளை பயனுள்ள விதத்தில் பயன் படுத்த விரும்புகிறேன் ...மிக மிக முக்கியமான தகவல் எனில் பகிருங்கள் ....சோர்வுடன் ஜெயஸ்ரீ .சிவ
புத்தாண்டு புலரட்டும்
புன்னகை ஒளி வீசட்டும்
பூலோகம் செழிக்கட்டும்
பூமித்தாய் மனம் குளிரட்டும்
அன்புடன்
சிவ .ஜெயஸ்ரீ
இன்று நான் எழுத்து.காம் மூலம் எழுத்தாளர் என்ற பட்டம் பெற்றுள்ளேன் ...இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன் ...தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் உங்கள் தோழி சிவ.ஜெயஸ்ரீ ....ஆதரவு நல்கிய அனைவருக்கும் அனைத்து எழுத்து தள நண்பர்களுக்கும் எனது நன்றிகள் ....
இன்று உலக தாய்மொழி தினம்......பிப்ரவரி 21.....உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ....
எழுத்து. காம் படிக்க படிக்க இனிக்கிறது.
.மிகப்பெரிய ஜாம்பவான்கள் இதில் உறுப்பினர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. ...தோழர்களே நல்லவற்றை பகிருங்கள்....படித்து பயன் அடைய காத்திருக்கிறேன்
14th Feb celebrated as valentine day. we are celebrating this day with full excitement but thing to know is that on 14th Feb our freedom fighter Bhagat singh and his two friends were hanged to death in 1931....let every Indian should know this important thing....JAI HIND
siva.jayasri
கனவே
* வாழ்க்கை படகில்
உனை ஏற்ற ஆசை பட்டேன்
காலமெல்லாம் கை கோர்க்க வேண்டி நின்றேன்
* நெடும் தொலைவு செல்ல திட்டமிட்டேன்
அதில் உனையே ஏற்றி செல்ல காத்திருந்தேன்
போகும் வழி நெடும் காடு
இன்னல் பல அங்கு உண்டு - அதை
ரசித்திடவே நாமும் அங்கு
* மேடு பள்ளம் அங்கு உண்டு
பசுமை வறட்சி அங்கு உண்டு
கடந்திடவே ஒன்று சேர்வோம் இன்று
* நெடு வழி பாதை முடிவில்
சொர்க்கம் உண்டு
குளிர்மை உண்டு
கத கதப்பும் உண்டு
திளைப்போம் நாம் நன்று .....
சிவ.ஜெயஸ்ரீ
காதல்
*சின்னஞ்சிறிய வயதில் சிங்கரமாய் தோன்றும்
எத்தனை முறை கேட்டாலும் சிலிர்பூடும்
அறிவுரைகள் பிடிகாது
அன்னையையும் கேட்காது
தலை விரித்து ஆட தோன்றும்
* நடு வழி வந்த பின்னே
திகைத்து நின்று திரும்ப தோன்றும்
வெட்கம் அது பிடுங்கி தின்ன
வந்த பாதை தொடர வேண்டும்
* மூச்சடக்கி வாழ வேண்டும்
முகம் புதைத்து வாழ வேண்டும்
இக்கரைக்கு அக்கறை பச்சை
இன்னமும் தான் வாழ்வில் ஓர் ஆசை
* கண்ட கனவு யாவும் பொய்யோ
வந்த இன்னல் யாவும் மெய்யோ
காதல் எல்லாம் மாயை
கனவே நீ விடு என்னை !
(...)
எண்ணம்
பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது இயல்பாக அவற்றை செய்யும் நாம் நிறைவேறாத ஆசைகள் என்று வரும்போது மட்டும் அடுத்தவர் மேல் பழி போடுவது எதற்கு ?
தூண்டுதல் உண்மையாக இருந்தால் அது தானாகவே தன்னை நிறைவேற்றிகொள்ளும் ....எண்ணங்களே செயல்கள் ஆகின்றன .....நல்லதையே நினைப்போம் நாடு போற்ற வாழ்வோம் .....
நான் நானாக
* பெண்பார்க்க வந்த நீயும்
நயமுடனே பேசி சென்றாய்
கண்களை துடைத்து விட்டு
காட்டினில் விட்டு சென்றாய்
* கனவுடனே காத்து நின்றேன்
மாயமாய் போனதென்ன
கூட்டிற்குள் சிக்கி நின்றேன்
நிலை குலைந்து போனேன் நானே
* காத்திருந்த காலமெல்லாம்
கண்ணீருடனே நானிருந்தேன்
காலமெல்லாம் பறந்தவுடன்
ஞானம் பெற்றேன் நானே
* முடிவுடனே எழுந்து நின்றேன்
முட்டி மோத துணிந்து விட்டேன்
நயமாக நானும் இன்று
நான் நானாக வாழ துணிந்தே விட்டேன்
சிவ.ஜெயஸ்ரீ