எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
காதுகள் கொண்ட செவிடர்களிடம்...
போராடிக் கேட்கும்
வார்த்தைகளெல்லாம்,
ஊமை மொழிகளே...!
கரங்கள் இணையாதவரை,
காலனுக்கு நம்மை
விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!
பள்ளி கல்லூரிகளில்...
ஆண் பெண் ஈர்ப்பு,
எந்தன் பார்வையில்...
புரிந்து கொள்வதில்,
நட்பின் ஈர்ப்பு...!
பகிர்ந்து கொள்வதில்,
அன்பின் ஈர்ப்பு...!
இதழ்களின் உரையாடலில்,
உணர்வுகளின் ஈர்ப்பு...!
கரங்களை இணைத்துக்கொள்வதில்,
பாதுகாப்பின் ஈர்ப்பு...!
தட்டிக் கொடுப்பதில்,
ஆறுதலின் ஈர்ப்பு...!
உள்ளத்தை இணைத்துக்கொள்வதில்,
காதலின் ஈர்ப்பு...!
உறவுகள் தொடரும் போது,
மகிழ்ச்சியின் ஈர்ப்பு...
பிரிவின் நினைவுகளில்,
கண்ணீரின் ஈர்ப்பு...!
-ஜெர்ரி
உலகில் ரசிப்பதற்கென்று,
உன்னிடம் எதுவுமில்லாத போது...
உன்னை நீயே ரசித்துப்பார்...!
அது உந்தன்
படைப்பின் புதுமையை
அழகாய் உணர்த்தும்...!!
-ஜெர்ரி