எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நண்பர்களே !
----------------------------------------
ஐ.நா சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்' என்று நிரூபிக்க பொது மக்களிடம் இருந்து 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. ஆனால் இதுவரையில் 4 இலட்சம் வாக்குகள் மட்டுமே இருக்கின்றன.
உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழீனத்தில் 10 இலட்சம் பேர் இலங்கையில் நடைப்பெற்றது இனப்படுகொலைதான் என்று சொல்வதற்கு தயக்கம் இல்லை. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த 10 இலட்சம் வாக்குகள் வேண்டும் என்ற தகவல் பெரும்பான்மை தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
எனவே எனது பேஸ்புக் பக்கத் (...)
ஏழ்மை பற்றி பேசும் பல படைப்புகளும், திரைப்படங்களும் கொண்டப்பட்டும்.
ஏழைகளுக்கு அது உதவாமல் போகும் போது.
அவர்கள் ஏழ்மையின் மீது ஏறி நாம் பயணித்துகொள்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நட்பிற்கும் காதலுக்கும் நாம் பார்க்கும் வித்தியாசம் ஒன்று மட்டுமே.
நம்மிடம் உயிராக இருந்தால் நட்பு .
நம்மிடம் மட்டுமே உயிராக இருந்தால் காதல் .
இது என் புரிதல் .
மதம் !!
தேவைகளுக்கு உண்டான பலனை அடைய தேவைப்படும் மனிதசக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு பரப்புரையே மதம்.
அதில் புனிதப்படுத்த ஒன்றுமில்லை.
அன்று பரந்துவிரிந்த தன் பேரரசுக்களை ஒன்றிணைக்க மாமன்னர்கள் மதங்களை தோற்றுவிக்க மன்னர்கள் மாண்டும் மறையாது மக்கள் மதியை மறைத்து இன்னும் இருக்கிறது இந்த மதம் .
நானும் அப்படிதான் ..
சிறுவயது முதல் நான் பேசி பழகிவரும் என் நண்பனை என் நம்பிக்கையை எனக்கு எதிரே ஒருவன் தவறாக சித்தரிப்பதும் , தவறாக பயன்படுத்துவதும் இவறிற்கெல்லாம் மேலாய் ஒருவன் தான் தான் அவன் என்பதும் என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை. அதை எதிர்த்தால் நானும் நாத்திகவாதி என்று பொருளில்லா பெயர் சூட்டுகிறார்கள். மூடர்கள். இல்லை அரக்கர்கள்.
கடவுள் குறித்த எனது பார்வை.
நாத்திகம் என்றொரு மதம் தொடங்கி அரசியல் செய்பவர்களே.. நான் உங்களோடும் சேரவில்லை.
நான் ஒரு செல்லா ஓட்டு தான். விட்டுவிடுங்கள்.
அண்டை மாநிலத்தில் அணைகட்டுவதை தடுக்க திறளும் கூட்டம் கூட
உள்ளூர் மணல், நிலக் கொள்ளைகளுக்கு திறள்வதில்லை.
ஆர்ப்பாட்டங்களும் சரி கொள்ளைகளும் சரி அரசியல் வியாபாரிகளின் திட்டமிட்ட வணிகமே.
எழுத்தை முத்தமிட்டபின் முகநூலை பார்த்தல் நாற்றமடிக்கிறது .
நன்றி கேட்டவன் அல்ல நான் .
நண்பர்களை காணவேணும் அங்கு நாளும் சென்றுதான் வருகிறேன் .
என்னை ஏற்றுக்கொண்ட எழுத்து.காம் கு நன்றி .
இந்த அறிவியல் உலகில்
ஒருவனின் திறமையே மற்றொருவனின் வறுமைக்கு காரணமாகிறது.
உனது ஒரே சொத்து :
உன் உடல் !
இந்த உலகத்தில் உனது ஒரே சொத்து.
உடலுக்காக உழை. உழைப்பிற்காக உன் உடலை இழந்துவிடாதே !.
அழிவது அலட்சியம் :
அறிவிலிகளுக்குதான் பகுத்தறிவு அவசியம்.
அலட்சியவாதிகளுக்கு அல்ல !.
விளைவுகளை விளங்கவைக்கப்பாருகள்
கேட்டும் திருந்தவில்லை என்றால் பட்டுத் திருந்தட்டும் !!.
பட்டும் திருந்தவில்லை என்றால் செத்து திருந்தட்டும் !!.