எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அன்னபறவை என நினைக்கிறேன் உன் விழிகள் பார்வையால் பிரித்துவிட்டாய்... (கடம்பன் பாலா)
03-Aug-2023 12:14 pm
அன்னபறவை என நினைக்கிறேன் உன் விழிகள்
பார்வையால் பிரித்துவிட்டாய் என் உயிரையும் உடலையும்;
வரி செலுத்தாமல் வியாபாரம் செய்கிறாய்
என்னுள் உந்தன் நினைவுகளை; கருணை கொண்டு நிறுத்திவிடு உன் விழிகளால் என்னை வதம் செய்வதை ;
காரணம் வேண்டுமா என்ன அழகை ரசிப்பதற்கு!
ஆனால் காரணம் வேண்டும் உன்னை நினைப்பதற்கு
அதிர்வுகள் கொள்கிறது எந்தன் கண்கள்
உந்தன் நீல நிற குறியீடுகளை நோக்கி; சமூக ஊடகத்தில் நான்;
உணர்வுகளை வெளிப்படுத்துகிறாய் சில ஸ்டிக்கர்களை அனுப்பி ,அர்த்தம் புரியாமல் உந்தன் இசைமொழியை நோக்கி என் மனம் ;
ஒப்புக்கொள்கிறேன் நீயும் பெண்தான் என்று,பெண்களை போலவே பேசுகிறாய்
ஸ்டிக்கர் தேடுகிறேன் எந்தன் காதலை வெளிப்படுத்த ஆனால் கிடைக்கவில்லை ஏனெனில் அதற்கு அளவே இல்லை;
ஏன் அன்பை அளவெடுக்க அந்த தொலைப்பேசிக்கும் அனுமதி தரப்படவில்லையோ!
மரணம்
நீ இல்லாத எந்தன் நினைவுகள் செல்லும் அவ்விடம் நோக்கி
திருடிய உயிரை கொடுத்துவிடு அப்பொழுதுதானே சாக முடியும்
கொரொனாவின் எதிரிகள்
இந்திய நாடு வல்லரசு ஆகும் என தலைவர்கள் பலர் நினைத்தது உண்டு. ஆனால் ,₹இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் அழியும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெண்களுக்கு பிறந்த இடம் ஒன்றும்; புகுந்த இடம் ஒன்றும் இருக்கும் ஆனால் , கொரோனோவிற்கு பிறந்த இடம் சீனா புகுந்த இடம் அனைத்து நாடுகளும்!
கொரோனோ 2020
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்" என்பார்கள் ஆனால் கொரோனோவைக் கண்டு உலகமே நடுங்கி விட்டது . சீனாவின் திடீர் தாக்கமோ இல்லை உலக சமநிலை வேண்டி மக்களின் உயிரைப் பறிக்க நடந்த சதி திட்டமோ !ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் தவிக்கும் மக்கள் எத்தனை துன்பங்கள் அடைய நேருமோ!
மருத்துவர்களும் செவிலியர்களும்
தன் பாதி வாழ்நாளினை இழப்போம் என தெரிந்தே மருத்துவர்களும் செவிலியர்களும் இப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.இதில் முழுவதுமாக வாழ்நாளை தருவாயாக என்று கொரோனோ
சிறிதும் பயம் கொள்ளாமல் கத்தி கேடயம் பதிலாக ஊசி மாஸ்க் என வைத்துக்கொண்டு கொரோனோ என்னும் படையை நோக்கி இவர்கள் அச்சமயத்தில் எல்லை காக்கும் ராணுவ வீரன் போல் தெரிந்தது
பிறக்கும் குழந்தையின் முதல் தாய் செவிலியர்களே !நோய் முற்றி இருந்தும் உயிரை பிடித்து காப்பாற்றுவது செவிலியர்களே! அசிங்கம் அவமானம் பார்க்காமல் அடுத்தவரை தொடும் உள்ளம் மருத்துவர்களே! செவிலியர்களே!
அனைவரும் கோவிலுக்கு பதிலாக மருத்துவமனையையோ கடவுளுக்குப் பதிலாக மருத்துவரையும் செவிலியர்களையும் வணங்கினால் நன்மை கிட்டும்.
நாம் இதுவரை தேவதையை கண்டதில்லை பூமியில் உண்டு, வெள்ளை நிற உடை அணிந்து செவிலியர்கள் உருவில் அன்பில் சிறந்தவர் தாயாவாள் அவளின் நகல் செவிலியர் ஆவாள்.
எங்களை மீறி கொரோனோ மக்களைத் தொடாது தொடவும் விட மாட்டோம் என நெஞ்சில் தைரியம் கொண்டனர் மருத்துவர்களும் செவிலியர்களும். எதையும் எதிர்பாராமல் சேவையின் உறைவிடமாக விளங்கும் இவர்களை வணங்குவோமாக!
துப்புரவு பணியாளர்கள் காவலர்கள்
கொரோனா இல்லாத காலத்திலாவது ஓய்வு என்று ஒன்று இருந்தது ஆனால் கொரோனோ காலத்தில் வெள்ளையும் கருப்பும் ( இரவும் பகலும் ) தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
- காவலருக்கு கையூட்டு வாங்க தடை விதித்த கொரோனோ ஒரு மனிதன் வாழவும் தடை விதிக்கிறது
- முகம் பார்த்து பேசிய மருத்துவர் முகத்தை மூடி உரையாடல் நிகழ்கிறது
- வெள்ளை உடை அணிந்த தேவதையின் உடல் முழுவதும் மறைத்து பேச வேண்டிய நிலைமை
- நாட்டிற்காக ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்காக மருத்துவர்களும் செவிலியர்களும்
மஞ்சள் நிற போதையினிலே மதுபான கடையினிலே !
மான ம்கெட்டு மாஞ்சிடவே நான் திரிஞ்சேன் !
பெத்தவள துடிக்கவிட்டு !
கட்டியவள கதறவிட்டு !
பெற்ற பிள்ளை என்னை பேச நான் அலைஞ்சேன் !
கை நிறைய காசு வச்சு கண்டவனுக்கு ஊத்திவச்சு,
கட்டெறும்பு போதையிலே நான் துடிச்சேன்!
பின்பு,
காசெல்லாம் கரைஞ்ச போது கண்டவன
பிச்சை கேட்டு ஓசி குடி நான் குடிச்சேன்!
போதி மரம் ஞானம் கூட புத்தியில இருந்துச்சய்யா!
இப்ப புத்தகத்தின் பாடம் கூட மண்டையில சேரவில்லை
ரோட்டோரம் நான் நடந்தா மரியாதை கூடுச்சைய்யா!
இப்ப,
ரோட்ட கூட்டும் தோழனுக்கும் என தொட்டு பேச கூசுதய்யா!
இரவானா தூக்கம் இல்ல
குவார்ட்டர் எனக்கு "தோழன்
ஆனான்"
காலையிலே விடுஞ்சி பார்த்தேன்
அவனே எனக்கு எமனா" போனான்
பெண்ணே உன் வார்த்தையில் வாழ்க்கையை கடன் வைத்து தவிக்கின்றேன்.... (கடம்பன் பாலா)
26-Jan-2020 12:05 am
பெண்ணே உன் வார்த்தையில் வாழ்க்கையை கடன் வைத்து தவிக்கின்றேன். உன் நினைவுகளால் தாய்மொழியின் தாளம் மறந்தேன். உன் குரல் கேட்டு என் மூளையின்நூலகம் சொற்கள் மறந்து ஆநாதை ஆகியது. உன் அன்பால் அகராதியில் அர்த்தமில்லா வாக்கியங்களை தேடுகிறது என் மனம்.