எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனவெளியில் அழுத்தம்
திரும்ப தொடர நினைத்தும்
திரும்பவும் அதே பாரம்
இறக்கி வைக்க சுமைதாங்கியை
தேடித் தேடி அலுத்தப்பின்
தூரத்தில் எழுத்து
வா...வந்து தொடு இளைப்பாரும்
உடனிருப்பாரும்
உன்னைப் போல் உண்டென
பட்டென்று பட்டதும்
தினமும் கொஞ்ச நேரம்
சுமையை இறக்கி
இடைவெளிக்கு விடை தந்து
மனவலியை குறைக்க
வந்திருக்கும்
எனக்குள் உறவாடும் தோழமையே தோள் கொடு

மேலும்

கருத்து சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரத்திற்கு மோடியை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வராமல்
இருந்தால்
எச்.ராஜா நாக்கு
பெரியார் ...அம்பேத்கார்
பெயரை சொல்ல
பயப்பட்டிருக்கும்,
இப்படித் தான்
ஈழத்தில் காங்கிரசு
நவடக்கமின்றி பேசியது
இப்போது தாட் பூட் சூட் என்று
உலறுது
ஆட்சி போன பிறகு
ஆம்பளையா பேச
தைரியம் வேண்டும்...
பெரியார் அம்பேத்கார்
ஆம்பளைடா..
அவர்கள் உண்மையான
மனிதர்கள்
அதனால் தான்
ராஜாஜி கல்கி
போன்றவர் நேசித்தார்கள்
மதித்தார்கள்
ஏனென்றால்
இவர்களும் மனிதர்கள்.
ராஜா மாதிரிகள்
இன்று குரைக்கும்
நாளை நக்கும்.
இதுவும் கருத்து
சுதந்திரம் தான்.

மேலும்

முழுமையாக வாசியுங்கள் தோழரே தமிழ் நாட்டில் கருத்துக்கும் பஞ்சமில்லை சுதந்தித்திற்கும் பஞ்சமில்லை மோடி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? நாடாளமன்றத்தில் பேசாமல் ரேடியோ,டிவி,வெளிநாட்டு பணக்கார. வர்க்கத்திடம் செல்பி எடுப்பதும் பயணத்திற்கு கூட்டம் சேர்க்க சகல ஏற்பாடுகளை நம்ம ஊர்கட்சிகள் ஆட்களை திரட்டுகிற பாணியில் கூம்பல் காட்டும் மோடி வித்தையில் ஒரு வகை மேடை வசனங்களை பாராளுமன்றத்தில் அவரே ஏன் பேசுவதில்லை. தந்தை பெரியாரும் சட்ட மேதை அம்பேத்காரும் போராடாமல் இருந்திருந்தால் மோடி டீ கடை ஊழியராகவோ அல்லது டீ கடை உரிமையாளராகவோ தான் மாறி இருப்பார் பிரதமராகி இருக்க மாட்டார். வரலாற்றை மறைக்கவோ மாற்றவோ நவீன ஞானத்தால் முடியாது. தற்காலிக ஆட்சி அதிகாரம் நமது ஜனநாயகத்தில் நீடித்திட இயலாது இதற்கும் பெரியாரும் அம்பேத்காரும் ஒரு வகையில் காரணமானவர்கள். 31-May-2015 7:55 pm
அம்பேத்கர் பெரியார் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் என்ன பேசினார்கள் என்று அந்த மாணவ அமைப்பும் கூறவில்லை .தடை செய்த ஐஐடி நிர்வாகமும் கூறவில்லை ... அப்படி என்ன தான் பேசி இருப்பார்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!! மோடி ஆட்சியில் இல்லை என்றால் ஹெச் ராஜா நாக்கு பயப்படும் என்றால் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று தானே அர்த்தம் .. அப்பொழுது நீங்களும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர் தானே .!!!!!!!!!!!!!!! 31-May-2015 12:46 pm

காலை நாளோடு
ஊடக காட்சிகளில்
வாழ வர மறுத்த
கணவன் குடும்பத்தை
எரித்தே கொன்றாளாம்
மதுரை அருகே
பாண்டீஸ்வரி-
இந்த பயங்கரம்
அரங்கேற
அவளை காரணமாக்கியது
காதலா-
இல்லவே இல்லை
வாழ்வதை வாசிப்புக்கும்
பார்வைக்கும்
கொடுக்காத
ஊடக செய் தீ
விளையாட்டின்
போட்டி
பாவம் யாரிங்கே
கொல்லப்பட்டவர்களா
கொன்றவளா
தினமும்
கெட்டதையே
செய்தியாக்கியோரும்
வாழ்வை காதலாக்காமல்
காதலை வாழ்வாக்காமல்
கொலையே காதல்
காதலித்தலே கொலைக்காக
வழி காட்டிகளின்
திசை தவறும்
தசை வேட்கையும்
ஒரு வ ழி பயணம்

மேலும்

உன் விழியில்
மௌனம்
என் மனதில்
சலனம்
கனவின்
ஜனனத்தையும்
மரணிக்க வைத்து
தூக்கத்தை தொலைத்த
விழியின்
சிகப்பில்
நீ காண்பது
குருதியின் ஓட்டம்
இதயத்தில் இல்லை
வார்த்தைகளால் தான்
வாழ முடியவவில்லை
மொனத்தாலுமா மரணித்தை
தருவது
பேசு
கண்களீன் மூலமாவது
கனவுகளின் வழியே
ஒத்தை ஒரப் பார் வையில்
சத்தை இழக்காழக்காமல்
உயிராவது சலனத்துடன்
சயனிக்கட்டும்




மேலும்

நன்று தோழரே! கவிதை பகுதியில் பதியுங்கள் கவிதைகளை. 19-May-2015 10:52 am
பொய் பேச கிடைத்தத கைபேசி தட்டச்சில் எழுதுகோல் மூலம் பழக்கப்பட்ட.வனுக்குதட்டச்சுப் பழக அவகாசம் தேவைப்படுகிறது. பிழை பொறுக்க வேண்டுகிறேன். 18-May-2015 7:52 pm
சில எழுத்து பிழைகள் தவிர்க்க ஒரு யதார்த்தம் கவிதையாக உருக் கொண்டுள்ளது ..அழகாக 18-May-2015 9:03 am

அம்மா என்பது வார்த்தை அல்ல. அது இதயத்தில் உயிரோடு உள்ள ஆன்மா. எப்போதும் வேண்டிக்கொள்கிறேன் "என்னை, என் அம்மா, அப்பாவுடன் ஜன்னத்துல் பீரதவுஸ் சேர்த்து வைப்பாயாக யாஅல்லாஹ்"

மேலும்

10வது 12வது மாணவர்கள் 80% சதவீதம் மேலே அரசு பள்ளியில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லா விட்டால் அந்த பள்ளி ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது சம்பளத்தை குறைக்க வேண்டும். தேக்கம் தொடர்ந்தால் இறுதியில் ஆசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் திருந்த இது தான் ஒரே வழி. இது சரியா? தப்பா? என்ன கூறுகிறீர் நண்பரே

மேலும்

ஒரு மனிதன் கடன்படுவது தன்னிடம் அகப்பட்ட பறவையை சர்ப்பம் என்ன செய்யும் அதன் கண்களும், அதன் மூச்சும் விஷத்தை கக்கிடும், நரம்புகளை எலும்புகளை சுருள் ஆக்கி நொறுக்கிடும். அதன் சட்டம் இரக்கமற்றது. அங்குலம் அங்குலமாக கொன்று விடும். கடனால் வாழ்க்கை கல்லறை போல் இருக்கும்.

மேலும்

விவசாயிகளின் வாழ்க்கையை ஏமாற்ற திட்டமிட்டுள்ள மோடி அரசுக்கு எதிராக விழித்தெழுங்கள் ஒன்று சேருங்கள் மோடி என்று சொன்னால் பொய் என்று அர்த்தம் ஆகும்.

மேலும்

விவசாயிகளின் வாழ்கையை ஏமாற்ற திட்டம் சரி .. அப்போ ஜெயலலிதா என்ன செய்கிறார் !!!! அதென்னா மோடி என்றால் பொய் ... உங்களின் வெறுப்பை அரசின் திட்டங்கள் மேல் காட்டுங்கள் ..மோடி என்ற எங்கள் பிரதமரின் மேல் காட்டாதீர்கள் .. 27-Mar-2015 8:09 pm

மோடி அரசு கையகப்படுத்தப் போவது விவசாயிகள் நிலம் மட்டுமல்ல விரைவில் முழு இந்திய நிலமும் கையகப்படுத்தப் படலாம். அப்போது தான் இந்தியாவில் அனைத்தும் செய்யப்படும் என்பதன் அர்த்தமே
மோடியின்
சூட் ஏலம் 1 தரம் - 2 தரம் - 3 தரம் 4.34 கோடிக்கு விட்டாச்ங்ங்கோ. அனைத்தும் கலந்த ஆடை விரைவில் ஏலத்திருக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏலம் எடுக்க விரும்பும் கோடிஸ்வரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு காத்திருக்கவும். இதான் சுத்தமான இந்தியா ஆகும்.

மேலும்

உன் பெயரின் முதல் எழுத்தை எழுதிடும் போது மனதில் தீ பிடிக்கிறது. முழு பெயரையும் எழுதினால் இதயமே வெடித்திடுமா? பயமாக இருக்கிறது. நீ நேராக பார்த்தால் சுடுகிறது - உன் பார்வை எரிமலை.
நீ மறைவாக பார்க்கையில் குளிர்கிறது - உன் பார்வை பனிமலை. கண்களும் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க முடியாததை -இமைகளை இறுக்கமாக மூடி- மூன்றாவது விழியால் கனவில் சந்திக்கும் கண்களின் சாதிப்பில் தான் எத்தனை மோசமான சந்தேகங்கள் வருகின்றன.
கனவு என்றைக்குமே உண்மையாகாது. உன்னுடைய பெயரையும் கண்களையும் எப்போதாவுது
நிஜத்தில் சாதிக்கும் வரை கனவுக்கென்றுமே
விடுமுறை தான்.

மேலும்

மேலும்...

மேலே