எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"உன்னால் நான் அம்மா "

உதிரம் உறைய
என்னை 
உயிர்ப்பித்து
புன்னைகித்த மௌவையே..!!

மாதங்கள் கழிய
என்னை 
மடியில் சுமந்தாயே..!!

மாங்காய் தின்றும்
மசக்கை போகலையம்மா..!!
உன்னுடைய மடியில்
நான் உருள இன்னும்
மாதங்கள் தேவையம்மா...!!

நாள் இருமுறை
நீராடும் உன்னுடைய
அழகிய சருமம்..!! 
இந்த "மாசை" 
மண்ணில்  இறக்க - மாதம் 
இருமுறை ஆனதம்மா..!!

உன் இடுப்புக்கு
கீழ் நான் இறங்க 
எத்தனை வலிகளை 
தாங்கி இருப்பாயோ..!!
என்னை பெற்ற
"கோமதியே"
என்னுயிரை தானமாக
கொடுத்தாலும்
உன்னுடைய "துயரத்திற்கு"
ஈடாகுமா..?

எத்தனை கற்பனைகள்
உன் மனதில்
வைத்திருந்தாயோ..!!
இந்த "கருப்பன்"  உன்
மகனாக பிறக்க.!!

கண்ணால் கூட 
வலிகளை காட்டாத
கற்பினியே‌.!! இன்று
"உன்னால் நான்"
இந்த உலகில் 
உயிருடோ...!!

மேலும்

ஒளிரும் கலையாய்

அவளின் கழல்...

வெளிச்சத்தில் கூட

ஒளிரும் அவளின் நிழல்...


அனிச்சம் பூவால்

உருவான அந்திகை..

ஆயிரம் கொல்லர்கள்

இணைந்தாலும்

உருவாக்க முடியாத அட்டிகை..


அதிகாலையும்

அவள் எழுக

விழித்திருக்கும்....

அந்திமாலையும்

அவளின நிழல்பட

காத்திருக்கும்.....


கவி ஊற்றில்

நனைந்த உடல்...

எழில் நதிகள்

சங்கமிக்கும் கடல்....


ஆசை என்னும் வார்த்தைக்கு

அவளே முதல்...

அன்பு என்னும் காதைக்கு

அவளே பாடல்...


காற்று அவளின்

மேனியை உரச

கோமேதகம் ஆனதே..

சுற்றும்

அவள் அழகை பேச

நவயுகம் இன்று

அவள்யுகம் ஆனதே...

மேலும்


மேலே