எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  நம்மை -
தொடுவதும் விடுவதும் 
தோல்வியின் பழக்கம் - அதில்
படுவதும் , பழக்குவதும் 
வெற்றியின் துவக்கம்!!!  


காதலுடன்.......
கரம்பயம் அருண்  

மேலும்

  !!!குலம்!!!


தேனிக்கு தெரியும் மலரின் குலம்!
வாணிக்கு தெரியும் வீணையின் குலம்!
கழனிக்கு தெரியும் கதிரின் குலம்!
கலப்பைக்கு தெரியும் கரிசலின் குலம்!
அகப்பைக்கு தெரியும் கலவையின் குலம்!
சிவப்புக்கு தெரியும் - எங்கள்
கருப்பின் குலம்!
தண்ணிருக்கு தெரியும் 
தெப்பையின் குலம்!
குளத்திற்கு கூட தெரியும் 
கயலின் குலம்!
அத்தனை தெரிந்தும் - அவைகள்
அழகாய் உறவாடும் –ஆனால்!!
நீ மட்டும் ஏனடா?
வெள்ளை கோட்டின்
கள்ளதனத்தில் அகப்பட்டாய்
காவியே! உன்னைத்தான்!

---!!கரம்பயம் அருண்!!---  

மேலும்

  !!!குருட்டு உலகம்!!!


கருப்பு போர்வையை 
காலம் விரித்த கன நேரத்தில் 
காணாமல் போகும் 
கழுத்து சங்கிலி - கேட்கும் 
கதறும் குரல் - கேட்டாலும் 
மறைக்கும் மானிட ஜடம் 
எங்கே போகிறாய் மானிடமே?

ஜன்னல் திற தென்றல் வரும் - கூட 
தேடிவரும் அன்டார் வீட்டு சங்கதியும்
மறந்து போகாத மானிட - நீ 
சிரிப்பதற்கு முன்னாள் நில். 
அந்த வீட்டு ஜன்னலும் 
ஓர் நாள் திறக்கப்படும்!

மென்பொருள் கொண்ட கரங்களில் 
மென்மை மனங்கள் கடின கருவியாய்
காவியம் படைப்பதாய் என்னி
பதியும் பாலானவை பற்பல - நம்
பார்வையில் உலகம் 
எங்கே போகிறாய் மானிடமே?

குத்தரிசி, கமங்கலி 
குத்துகால் போட்டு , கால் நீட்டி 
உண்டபோது நீண்டது கால்கள் மட்டுமல்ல -நம் 
வாழ்காலங்கள் கூடத்தான்!

இருட்டு விலகி வெளிச்சம் - ஓர் 
அறிவியல் வளர்ச்சி 
துக்கம் விலகி அவசரம் - இது
நோய்களின் வளர்ச்சி 
காலமும், தூரமும் சுருக்கம் - அகா!
காலனும் கணக்கை சுருக்கினான்
கணிப்பொறி அங்கேயும்!
எங்கே போகிறாய் மானிடமே?  

காதலுடன்.......
கரம்பயம் அருண் 

மேலும்


மேலே