எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சங்கம் வளர்த்ததொரு தமிழ்பெண்ணின் தரம்தாழ்ந்து பங்கம் வந்ததென்று பயந்திருந்த... (MURUGANANDAN)
25-Jan-2014 11:40 pm
சங்கம் வளர்த்ததொரு தமிழ்பெண்ணின் தரம்தாழ்ந்து
பங்கம் வந்ததென்று பயந்திருந்த வேளையிலே
சிங்கமென சிலிர்த்து சீறிவந்தாய் எழுத்து.காமே
எங்கெங்கோ மூலையிலே இருந்ததமிழ் ஆர்வலரை
வங்கக் கடலலைபோல் வந்துவிழ ”வலை”விரித்தாய்
தூங்காது மொழிவளர்க்க தூண்டிவிட்டாய் ஆர்வத்தை
தங்கத் தமிழன்னை தரணியிலே ஒளிர்கின்றாள்.....
மங்காத கதிர்போல்நீ பணிசெய்தாய் வாழ்த்துகிறோம்