எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மனிதன் வாழ்க்கைக்கு அவசியமான அறம், பொருள்,இன்பம் ஆகிய மூன்றையும் விளக்கும் திருக்குறளை உலகுக்கு தந்த மொழி தமிழ் மொழி.ஆம்! தமிழருக்கு மட்டும் அல்ல; இந்தியருக்கு மட்டும் அல்ல; உலகுக்கே! ஏனெனில் திருக்குறளின் மகிமை உணரப் பட்டதால் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு சிலரால் வெளியிடப் படுகிறது. மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்க முயற்சிகள் நடக்கிறது.
தமிழ் மொழி பொருள் வன்மை மிக்கது.
1. விருந்தாளி = விருந்து + ஆளி; அதாவது விருந்தை ஆள்பவன். விருந்தோம்பல் செய்பவர் விருந்தாளி என அழைக்கப்படும் விருந்தினரை அரசனைப் போல் நினைத்து உபசரிக்க வேண்டும்.
2. தொழிலாளி = தொழில் + ஆளி ; அதாவது தொழிலை ஆள்பவர். முதலாளி எவ்வளவுதான் வணிகத்தில் பணம் போட்டாலும் வேலை செய்யும் தொழிலாளி நன்கு செய்யாவிடில் வணிகம் வளருமா? அவர் தொழிலாளியை மரியாதையுடன் கவனித்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர் தொழிலுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்க வேண்டும்; ஏறும் விலைவாசிக்கு தக்கபடியும் சம்பளம் ஏற்ற வேண்டும். 3.முதலாளி = முதல் + ஆளி; வியாபாரம் செய்பவர் முதல் போட்டதனால்தானே எல்லோருக்கும் வேலை கிடைத்தது? ஆகையால் ஊழியர்களும் தொழிலாளிகளும் முதலாளியின் வணிகம் நன்கு நடக்க அவர் மீது மரியாதையுடனும் நன்றியுடனும் நன்கு உழைக்க வேண்டும். 4. கூட்டாளி = கூட்டு+ஆளி; ஒரு ஆள் தனியாக வணிகம் செய்ய முடியாவிடில் இன்னொருவரையும் முதல் கொடுக்க வைத்து அவர் உழைப்பையும் பயன்படுத்தி வணிகத்தை விரிவுபடுத்துகிறார். அந்த இன்னொருவர் கூட்டாளி ஆகிறார்; அதாவது சேர்ந்து ஆள்பவர் ஆகிறார்.அவரும் அரசர்தானே! 5.காவலாளி= காவல் +ஆளி; காவலின் முக்கியத்தை சொல்ல வேண்டியதில்லை. எனில் அவரும் அரசர்தானே! இப்படி மனிதர் எல்லோரையும் அரசராக பாவிக்கிறது தமிழ் மொழி! யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது எனும் பண்பை போதிக்கும் மொழியாக தமிழ் மொழி இருக்கிறது.
எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள்
எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 04 ----தலைப்பு --- பொங்கல் கொண்டாட்டத்துக்கு இயற்கை விவசாயத்தின் பங்கு.
எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 03---- தலைப்பு வெளிநாட்டு தமிழர்களும் பொங்கல் கொண்டாட்டமும்
எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 02 --- தலைப்பு -- போகிப் பண்டிகையும் இந்திரனுக்கு என்றும் நன்றி செய்தலும்
எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 01 --- தலைப்பு -- பொங்கல் கொண்டாட்டமும் வள்ளுவரும்
திருவள்ளுவர் என்ன சொன்னார்?நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று: என்றும்,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்றும்இன்னும் சில குறள்கள் மூலமாகவும் நன்றியாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தினார்.
சரி; பொங்கல் எதற்காக கொண்டாடுகிறோம்? முதல் நாள் போகி பண்டிகை விளைச்சலுக்கு உதவும் மழையை தந்த இந்திரனுக்கு நன்றி சொல்ல;இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி சொல்ல,மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் உழவில் உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்ல;மூன்று நாள் தொடர்ந்து 'நன்றி', 'நன்றி' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.நன்றி என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும்போதே ஒவ்வொரு முறையும் திருவள்ளுவர் ஞாபகம் வர வேண்டாமா? அவசியம் வர வேண்டும். நன்றி என்ற இந்த முக்கியமான பண்பை நமக்கு கற்றுக் கொடுத்த திருவள்ளுவரை நினைக்க திருவள்ளுவர் தினம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? நான்கு நாட்களும் அவரை நன்றியுடன் நினைப்போம்!