எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைப்பேசி


கையில்  'பேசி'
  கண்டோன்  வாழ்க!
வைய  கத்தின்
  வரம்தான்  வாழ்க!
மையைத்  தடவும்
  மந்திரம்  போல,
செய்யும்  வித்தை
  செய்தோன்  வாழ்க!

பொய்யும்  உரைக்கும்!
  புகழ்ந்தும்  உரைக்கும்!
பெய்யும்  மழையாய்
  பேசிக்  களைக்கும்!
மெய்யாய்  உரைக்கின்,
   மேதினில்  'பேசி'
வைய  கத்தின்
   வரம்தான்!  வாழ்க!

மா.அரங்கநாதன்.

மேலும்

காகிதத்தாள்


உழைப்புக்கு  ஊதியம்
          பணத்தாள்!
உழைக்க  ஒருவரும்
          வராவிடில்,
பணத்தால்  இல்லைஎந்த
          பயனுந்தான்!
பணத்தாள்  வெறும்ஓர்
         காகிதத்தாள்!

மா.அரங்கநாதன்.

மேலும்


மேலே