எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூரங்கள் நம்மை பிரித்திருந்தாலும்
நினைவுகளினால் என்றும்
இணைந்திருப்போமென
எண்ணியிருந்தேன்..

ஆனால் தோழனே,
"தனிமை" என்ற ஒரு வார்த்தையை
நீ உரைத்து நான் கேட்ட பிறகு
விடை தெரியாமல் விழிக்கின்றேன்..

குறைவு..
என் மீதான உன் நினைவுகளிலா??
அல்லது
உன் மீதான என் அன்பினிலா ?? என்று..

மேலும்

இளைஞனே..!! இளைஞனே..!!
அங்கே உன்னை எண்ணி
பல கனவுக் கோட்டைகளை
எழுப்பிக் கொண்டிருக்கிறார்
அந்த ராமநாதபுரத்து விஞ்ஞானி..

ஆனால் இங்கு நீயோ
சின்னஞ்சிறு அற்ப விடயங்களுக்கு எல்லாம்
இப்படி துவண்டு போய் நிற்கிறாயே
இது நியாயமா..??

நீ நினைத்தால்
இந்த அற்பங்களைஎல்லாம்
உதறிவிட்டு
அண்டத்தினரையே அசரவைக்கும்
அற்புதச் சாதனைகளை
நிகழ்த்த முடியுமே..!!

பிரச்சனைகளுக்குப் பின்னால்
முடங்கி நிற்காமல்
பிரபஞ்சத்தையே
உன் முன்னால்
வணங்கி நிற்கும்படி செய்ய
உனக்குத் தகுதி இல்லையா என்ன..??

ஒரு சிறு உளி தானே
அத்தனை பெரிய மலையையும்
தகர்க்கிறது..
உன் ஒரு துளி நம்பிக்கை போதுமே
இந்தப் பிறவிப் பெருங (...)

மேலும்

மிக்க நன்றி..!! 24-Feb-2014 5:29 pm
அருமை !தன்னம்பிக்கை தரும் வரிகள் ... 17-Feb-2014 11:00 am

மேலே