எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சுதந்திர தின விழா
வாழவைக்கும் வாழிய பாரதம் என்று வணக்கம் கூறிவந்த வணிகனே
அப்போது தெரியவில்லை அயலவனின் நோக்கம் அடிமைத்தனம் என்று
பார்த்து வியந்த என்நாட்டின் வளங்களை படகேறி அள்ளிச் செல்ல நினைத்தாயோ
கொடுத்துப் பழகிய உள்ளங்கள் பறித்து செல்ல ஒருபோதும் அனுமதிக்காது
தேன் என்னும் சுதந்திரம் மக்கள் அறிய வெள்ளையன் கூட்டிலே கல்லெறிய
அகிம்சை வழியில் ஒரு போராட்டம் அடிமைத்தனத்தை விலக்க
அறத்தின் வழியில் ஒரு போராட்டம் எங்கள் வீரத்தை தெரியப்படுத்த
பாரதி வரிகளோ சுதந்திரத்தை விதைக்க
ஒருநாள் என் மூவர்ணக்கொடி பறக்க
பகைவனோ எம்வீரம் கண்டு திகைக்க
சுதந்திரத்தால் என்நாடு சிறந்தோங்கும்
வெள்ளையர்கள் கொடுத்தான் சுதந்திரம் காரணம்
என் வீரர்கள் செய்த தந்திரம் செய்த மக்களின் தியாகம் ஒருபோதும் மறையாத எந்நாட்டின் வீரம் பெற்ற சுதந்திரத்தை பேணிகாப்போம் உயிர் விட்ட தியாகியின் மானம் காப்போம்
பெண் கூந்தல்மயில்தோகையினால் தென்றல் வருடுகிறதே- ஏனோமனம் ஏங்கி பனியாக... (Muthu E)
29-May-2022 3:31 pm
பெண் கூந்தல்
மயில்தோகையினால் தென்றல் வருடுகிறதே- ஏனோ
மனம் ஏங்கி பனியாக உருகுகிறதே
கருமையிலும் காதோரம் காமுமம் தொடங்குகிறதே
இனிசேர வேண்டாம் இன்பமும் தொடங்கும்.
படகேர வேண்டாம் பயணம் தொடங்கியது
கடவுளின் சதியோ காலத்தின் விதியோ
வாழ்வில்எது நடக்கும் போது - தாண்டி
செல்வது இயற்கை வகுத்த வழியோ
சோதனை வந்தாலென்ன வெற்றி கொள்ளும்
விழிப்பு வந்தால் வாழ்வில்
இதெல்லாம் நடக்கட்டுமே
உணர் நீயும் கடவுள் தான் உண்மை பேசும்போது நீயும் கடவுள் தான்
உணர் நீயும் கடவுள் தான் உரக்க கூறும்போதும் நீயும் கடவுள் தான்
குற்றத்தைக் கண்டு பொங்கினால் நீயும் கடவுள் தான்
குறை தீர்க்க உதவினாலும்
நீயும் கடவுள்தான்
பிறருக்காக அழும்பொழுது நீயும் கடவுள் தான் பிடிவாத குணம் பெற்றால் நீயும் கடவுள் தான்
விடை கேட்க வினா எழுப்பினால் நீயும் கடவுள் தான்
வன்மை எதிர்த்தால் நீயும் கடவுள் தான்
அன்னை
அன்பு வைத்து அறவணைத்தாய்
மழலை என்னை பேச வைத்தாய்
இந்தப் பூவுலகை அறிய வைத்தாய்
பத்து மாதம் கருவில் சுமந்தாய்
நீ கடவுள் என புரிய வைத்தாய்