எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 என் கவிதைகள் ...விற்பனைக்கல்ல



என் கவிதைகள் 
விற்பனைக்கு அல்ல 
என்பதை சொல்லாமல் 
ஒரு காகம் 
உயரத்தில் 
பறக்கிறது .. 
அதன் எச்சங்களில் 
கோடி விதைகள் 
மரங்கள் ஆகி  விடுகின்றன ! 


என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லாமல் 
ஒரு அருவி 
நதியாகி கடலில் 
சேர்கிறது .. 
கோடானு கோடி 
பயிர்கள் இதற்குள் 
விளைந்து விடுகின்றன ! 

என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லாமல் 
காற்றும்..மழையும் 
மண்ணும் , வானும் 
அற்புதங்கள் நிதம் 
செய்கின்றன.. 
அகிலத்தை அதற்குள் 
வாழவைத்து! 


என் கவிதைகள் 
விற்பனைக்கல்ல 
என்று சொல்லி 
பஞ்சைகளிடம் 
கவிதை விற்ற 
மனிதர்கள்.. 
.. 
.. 
என்ன மாற்றம் 
ஏற்படுத்தினார்கள்?  

மேலும்


மேலே