எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

   கார்முகில் கரு நீலம் -அந்த 
அண்டகோளங்கள் தன்னுள் கொண்ட 
வானும் நீலம்-மண்நீர்க் கடலும் நீலம் 
அன்று மூன்றடியில் விண்ணையும் 
மண்ணையும் அளந்து மூன்றாய் 
அவன் தலையை மண்ணில் அழுத்திய
மாலவன் நிறமும் நீலம் - என்னவனே 
நெடுந்துயர்ந்தவனே திண் தோளா 
நான் மாறா காதல் கொண்ட நீயும் 
நீல நிறத்தோனே என் மனத்தைக் 
கொள்ளைக்கொண்ட நிறம் நீலம் 
நான் உன் நிலவு பால் நிலவே 
என்றும் உனைத்தேடி உன்னில் 
வாழ்ந்திட நினைக்கும் நிலவுப்பெண் 
கார்முகிலாய் காதலனே கன்னி நான் 
உன்மீது வானளவு காதல் கொண்டேன் அறிவாயே.....
என்று காதலர்கள் தன் காதலை வெளிப்படுத்தும் போது காதல் செய்யலாம் என்ற எண்ணம் யாருக்குதான் வராது........   

மேலும்

மரம் வளர்ப்போம்:-
நான் விதைத்த விதை இன்று விரிந்து , பரந்து , மேலெழுந்து உயர்ந்து இந்த கிராமத்திலே ஒரு இரும்பு தூணாக நிற்கிறது............
நான் ஆசைப்பட்டதெல்லாம் என் சந்ததியினருக்கு நிறைவேறியது.........
விதைத்தேன் மரமானது.........
மரமாகி மகிழ்வித்தது...........
விதைப்பது என் கடமை........
வளர்வது அதன் கடமை.........
விதைப்பதயும் ......... வளர்வதயும் யாராலும் தடுக்க இயலாது.....
ஆனால் வதைப்பதை தடுக்கலாம்........
மரம் வெட்டுவது உயிரை வதைப்பதற்கு சமம்........
மரம் வளர்ப்போம்............வளம் பெறுவோம்
மரம் வளர்ப்போம்............வாழ்வை நிலையானதாக மாற்றுவோம்.

மேலும்

எப்படி என்று தெரியவில்லை          நேற்றுவரை பேருந்து பயணத்திற்கு  கூட பணம் இல்லாத நான் இன்று பணம் இல்லாமல் உன்னை தேடி இந்த உலகையே சுற்றி வந்துவிட்டேன் ................                 இதுதான் காதலின் சக்தியோ !!!!!!!!!!!

மேலும்


மேலே