எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💧#நீரின்றி அமையாது உலகு 🌏


நீரின்றி
அமையாது உலகம் 
அந்த 
காரின்றி 
கரையுமா தாகம்? 

மரமின்றி 
பொழியுமா மேகம்? 
ஈரமின்றி 
முளைக்குமா மரம்? 

சாவும் தருவாயிலா 
யாவும் நீரென 
யாத்திரை போவது? 

எச்சரிக்கை !
மானுடா! எச்சரிக்கை!

நீர் வார்த்த 
உபாயக் குழாய்கள் 
நீர் நீத்து 
அபாயக் குரலில்
அனலாய் மொழிவது காணலயா?

மரம் 
நடவே...
நீரில்லாது போவதற்குள் 
மரம் 
நட்டு வளர்த்திடு! 

உணவுக்கு மாத்திரை
உருவாக்கிய மானுடா?
நீருக்கு மாத்திரை 
நீ தயாரிக்க முடியுமா..?

நீரை விற்று
பணமாக்கும் மனிதா? 
உன் 
பணத்தைப் பிழிந்தால் 
நீரென்ன ஒழுகுமா? 

நீ
திருந்தாது போயின் 
நெருப்பிலிருந்து ஒழுகும் 
நீரும் வற்றிவிடும் 

பணத்துக்கு 
வட்டியும் வரியும் 
வரம்பின்றி செலுத்துகிறாய்

நீ வெட்டிய 
மரத்துக்கு...? 

கடன்கார மனிதா...! 
கண்விழி! 

பணவங்கி போல
மர வங்கி தொடங்கிடு! 

நீ
வெட்டும் மரத்துக்கு 
வட்டியோடு சேர்த்து 
நட்டிடு மரத்தை...! 

இந்த 
கடனுக்கு 
எந்தக்
கட்சிகளின் வாக்கிலும் 
தள்ளுபடி இல்லை 

தாரளமாக 
நட்டிடு மரத்தை!

           இளந்தமிழ் இளவரசி  
💧🌱🌳🍀🌧🌏💧

மேலும்

                தீர்வு.  

       
      சாக்கடையை    மூடாமல்

      மூக்கை  மூடுகின்றன 

      மூவாயிரம்   கைகள்.

மேலும்


மேலே