எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பெண்ணே..சபித்தபடி நீ சிரித்தாய்குரூரப்பார்வைகளில்வளர்ந்த காதல்இதயக்கீறலில் வழிந்தகுருதியைக்குடித்தே செழிக்கின்றது..நடுவெயில் மணற்பரப்பாய்தகிக்கின்ற... (Rafiq)
04-Sep-2019 5:49 pm
பெண்ணே..
குரூரப்பார்வைகளில்
வளர்ந்த காதல்
இதயக்கீறலில் வழிந்த
குருதியைக்குடித்தே செழிக்கின்றது..
நடுவெயில் மணற்பரப்பாய்
தகிக்கின்ற மனதுள்
நடக்கின்ற புழுவாய் உன்
நினைவு ..
நெருப்பினில் குளித்த கூர்முனையாலுன்
பேரெழுதிச்செல்கிறாய்
கனவிற்குள்..
கொடுங்கோடையடி உன் இளமை
நீரில்லா நிலமாய் நான்...