எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தீபத்திருநாள்
தீபத் திருநாளில் இனிய
தீபத்தை ஏற்றிடுவோம்
தீயவற்றை எல்லாம்
பெரும் தீயிட்டு கொளுத்திடுவோம்
சாபத்தை பெற்றவர்கள் போல்
சலித்துப் போன வாழ்க்கையை
காண வேண்டி இருக்கிறது அதை
பலத்த கரம் கொண்டு அழித்திடுவோம்
ஏழைக்கு கஞ்சிதான் என்றநிலை மாறி
எல்லோர்க்கும் இங்கு சமநிலை ஓங்க
வல்லாரின் ஓங்கு கைகளை உடைத்து
வல்லானின் திருவருளை வேண்டி நிற்போம்
சொல்லாலும் செயலாலும் உண்மை கொண்டு
எல்லா மக்களும் நம்மவர் என்றெண்ணி
பேதமை தீயை கொளுத்திடுவோம்
பேராற்றுமைக்கு வழி சமைத்திடுவோம்
உதவியின்றி போராடும் முதியவர்களையும்
உணவின்றி தவிக்கும் நமது உறவுகளையும்
யாரோ என்றெண்ணாது நம் சொந்தங்கள்
என்று அவர்கள் துக்கத்திலும் பங்கெடுப்போம்
எத்தனை குழந்தைகள் வீதியிலே ஏங்கி
தவிக்கின்றார் சாலையிலேயே விழிகளில்
ஏக்கம் கொண்ட அபலைகளின் இனிய
வாழ்க்கைக்கு ஒரு தீபம் ஏற்றிடுவோம்
இன்றய அநீதி நிலை மாறிடணும் இங்கே
பெண்களும் பயமின்றி வாழ்ந்திடணும்
எல்லோருமே ஓரினம் ஒருறவு என்றே
இனிய தீபத்திருநாளை இனிதே வரவேற்போம்
சிறு ரோஜாவொன்று
ரோஸ் வண்ணத் துணிக்குள்ளே !
துயில் கொண்டது சிறு ரோஜாவொன்று!
மெத்தென்ற போர்வைக்குள்ளே!
தொட்டுப்பார்க்க ஆசை பட்டேன்
ஓசை பட்டால் எழுந்து விடுவாயோ
என்று எனக்குள்ளே ஏக்கப்பட்டேன்
பட்டு விரல்களை தொட்டுப் பார்க்க
ஆசைதான் சொல்ல முடியவில்லையே
ஆனாலும் எனக்குள் பரவசம் தான்
ரோஜாப்பட்டு தங்கப்பட்டு செல்லப்பட்டு
தங்கமாம்பழம் செல்லக்கண்டு வட்டக்கண்ணி
போட்டுக்கண்ணி ராசாத்தி
நீ எனக்கு ரோஜாப்பூ செவ்வந்திப்பூ
சிரிப்பழகி போம்மா எனக்கு
மூச்சு வாங்குகிறது இன்னமும்
இருக்கு என் இதயத்தில் எழுத்தால்
வடிக்க முடியவில்லை என்னால்
சொல்லி கொடுத்ததை அள்ளிக்கொள்ளும்
சிறப்பு உன்னை தினம் பார்க்காமல்
போனால் ஏனோ எனக்குள்ளே தவிப்பு
புல்லரித்து போகிறேனடி உன்
முளைத்தும் முளைக்காத மழலை மொழியில்
ஒரு கவிதையே பல கவிதை சொல்வது போல்
இருக்குதடி எனக்கு
நாங்கள் யார் நீ யார் தெரியவில்லை எனக்கு
அத்தனையும் தந்தது இந்த பிணைப்பு
எது உறவுக்கும் அப்பாற்பட்ட சொந்தமடி
தூரங்கள் பல போனாலும் உன்னை தொடர்ந்து
இருப்போம் எங்களின் எண்ணங்களால் ....