எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஆவாரம் பூ நிழலில்___ஆதாம் ஏவாளாக நிற்போமா ! ஆதிவாசி... (ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb)
21-Sep-2019 7:42 am
ஆவாரம் பூ நிழலில்
___ஆதாம் ஏவாளாக நிற்போமா !
ஆதிவாசி காலம் சென்று
___ உச்சம் கற்போமா !...
பூச்சூடும் நாள் முதலாய்
___பூவரசி நீயென் சொந்தம் !
பூவுலகம் இருக்கும் வரை
___பூக்கவேண்டும் நம் பந்தம் !...
சிதறும் மலர்க ளுன்னை
___சிணுங்க வைக்க காத்திருக்கும் !
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
___சிந்தையில் நின்று ஒலித்திருக்கும் !...
மதம்பிடித்த யானையை உந்தன்
___முந்தானையால் கட்டி இழுத்திடலாம் !
முத்தமிட்டு முத்தம் வாங்கி
___முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம் !...
வளமையின் உச்சம் கண்டு
___வண்ணத்துப் பூச்சியும் வசமாகும் !
விடையில்லா கேள்விக்கு - இவள்
___விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !...
எழுத்தோடு இணையும்
... #ராஜேஷ்...
நன்றி சகோ 23-Sep-2019 4:44 pm
ஆதாம் ஏவளாக
ஆதிவாசி வாழ்க்கை
அருமை! 22-Sep-2019 4:35 pm