எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்
தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்
விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது
கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல
பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்
தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?
ஏளனம் காட்டும்
ஏளனம் செய்து பார்த்தாய்
இது மாறுமா???
இதழ் திறந்து
இருக்க
நிற்க, நடக்க
கை கால் ஆயுதமாகி
புதிய உலக
புதிய மனித
மானுடம் மனதில் ஏந்தி
ஆசுவாச நேரமின்றி
அங்குமிங்கும்
அயர்ச்சி நடை போடும்
உட்கார்ந்தாலும்
நாளையும் , நாளையையும்
பொழுதெல்லாம் நோண்டும்,
சொந்தம் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சிதறி கிடந்தாலும்
சிதறல்கள் சேர நேரம் பிடிக்காது,
நேரம் எடுக்காது,
சிந்தனை சிக்கிக் கிடக்கும்
கடிவாளமிட்ட குதிரை போல்,
காலம் எண்ணி கால்கள் முடங்கும்.
காதல் கூட
கவனிக்க ஆள் இன்றி
கவலை நிலையில் மல்லாந்து படுக்கும்,
அப்படியே காதல் கொண்டாலும்
பாதியில் பறந்தோடும்
பந்தம் சிறகருந்து
ரெக்கை இறகாகும்.
பணம் குறிக்கோளாகும்
மனம் குறிவைத்து பேசும்
தினம் அதன் போக்கில்
முள் சுற்றி நேரம் கழியும்.
நாளோ வருடமோ
எது கழிந்ததாலும்
அதோடு சேர்த்து
எந்திர மனிதமும்
பயணித்து கழிகிறது......