எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரினால் உயிர் தருபவள் அன்னை 
உருவாக்கி உறுத்தருபவள் அன்னை 
முதல் உயிர் தந்த என் அன்னை 
அனுதினமும் காத்திடுமாறு வளர்த்திட்டார் அண்ணனை 
தூசியும் தாக்காது சிறுவயதில் காத்த அன்னை
அன்னை அசந்த நேரமத்தில் எனக்காக 
தேள்கடியை தாங்கி அதைக்கண்டு நான் அழ 
தேள் கடித்தத்தையும் அறியாது என் 
அழுகையை போக்க கொஞ்சினான் 
அன்னை வந்து என்னை தூக்கு
நான் அழுகையில் கூறியதை அறிந்து 
தேள்கண்டு அண்ணனை காப்பாற்ற 
அலறி சென்றார் அன்னை ...
இன்னும் பல உண்டு சொல்ல ஒருநாள் போதாது எனவே வாழ்த்து சொல்லி முடிக்கிறேன் !
முதல் ஆசிரியரும் அகிலமே மறந்து 
அன்பு வைக்கும் என் அண்ணனும் 
எனக்கொரு அன்னையே ...
என் இரு அன்னைக்கு பணிகிறேன் ...
அன்னை தின நல்வாழ்த்துக்கள் !!

மேலும்

பிறப்பும் ஒன்றுதான் இறப்பும் ஒன்றுதான் நமது உடலுக்கு, 
ஆன்மாவிற்கு மட்டுமே புது பிறப்பு உண்டு !!! 
உறுப்புகளும் உடலும் மக்கும் குப்பை போன்றது அழிய கூடியது, 
உயிர் ஆன்மா மட்டுமே புது பிறப்பு அடையும் !

அழியும் உடலுக்கு அழகை ஊட்ட துடிப்பதை விட்டு,
வாழ போகும் ஆன்மாவை பரிசுத்தமாக்க வேண்டும்,
நேசம் அன்பு பாசம் பரிவு பகிர்வு விட்டுகொடுத்தல் போன்ற நற்குணங்களால் !!!  

மேலும்

காரணமின்றி மகிழும் உணர்விற்கு பேர் தான் காதலோ ?

மேலும்

காதல் 

மனதின் வார்த்தை வெளிப்படாமல்,
மனதோடு என்னை எண்ணி நியும், 
உன்னை எண்ணி நானும்,
நினைப்பதை பகிரவோ சொல்லவோ,
வார்தையற்று நிற்கும் நிலை தான் காதலோ ?

இந்த மௌனத்தின் பாஷை வெளிப்படும் நாளில்,
நம் உறவின் நேசம் தொடங்கும் அந்நாளில் !!!
    

மேலும்

நன்றி நண்பரே ! 14-Feb-2016 9:14 am
இதுவும் ஒரு வகை காதல் அருமை, வாழ்த்துக்கள் - மு.ரா. 14-Feb-2016 9:07 am

வியந்தேன் !!!

பார்வையின் விழி பக்கம் பார்க்க 
பரவசம் கொண்டது மனது 
பார்க்கும் புறம் எல்லாம் தமிழ் 
அமுதமும் அழகும் கொண்ட அற்புத காட்சி 
அகம் மகிழ்ச்சி துள்ளலில் அக்களித்தது !!!!

மேலும்

நன்றி நண்பரே ! 07-Feb-2016 8:51 pm
அரமை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - மு.ரா. 07-Feb-2016 8:26 pm

மேலே