எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
படித்ததில் பிடித்த கவிதை
தாய்
உன்னை
கருவினில் சுமந்த அவளை
கருத்தினில்
சுமக்க
கவிதை கர்ப்பம் தரிக்கும்.
முன்னோர்களில் முட்டாள்கள் சிலர் மூட்டியிருக்க வேண்டும் இன்னும் அனையவேயில்லை... (சிவப்பிரகாசம்)
23-Jun-2015 1:50 pm
முன்னோர்களில்
முட்டாள்கள் சிலர்
மூட்டியிருக்க வேண்டும்
இன்னும் அனையவேயில்லை
சா( தீ )
என் அப்பனும் ஆத்தாளும் மட்டுமல்ல
என் பாட்டனும் முப்பாட்டனும்
கண்டதேயில்லை
கோவில் கருவறை
சாமி தரிசனம் வேண்டி
நான் கோவிலில் நுழைந்து விட்டதற்கு
கொடுக்கப்பட்டது சவுக்கடி தண்டனை
மெல்ல ஆறிவிட்டது
சவுக்கடி பட்ட ரணம்
ஆனாலும்
ஆற மறுக்கிறது
நீ கீழ்சாதி
எனும் சொல் சுட்ட என் மனம்
வேலைக்களைபினால்
நாவரண்டு
கையேந்தி தாகம் தீர்க்கிறாள்
ஆத்தாள்
குவளை தொட்டு
நீர் அருந்த முடியாத நிலை
பத்திரம் தொட்டால்
பட்டு விடுமாம் தீட்டு
என் சாதி மக்கள் உழுத வயலுக்கும்
க (...)
//
என் சாதி மக்களை தொட்டு படைக்கையில்
இறைவனும் தீட்டு பட்டிருக்கவேண்டுமே? //
மிகச்சிறந்த வரிகள் ......
உயர்ந்து நிற்கிறது கவி 25-Jun-2015 6:26 pm
கேட்டா உங்களைப் படைத்த இறைவனும் எங்களைப் படைத்த இறைவனும் வேறு என்று கதாகாலட்சேபம் நடக்கும்... தீயாக உள்நுழைந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்.. சிறிய எழுத்துப் பிழைகள் காணக் கிடைக்கின்றன. திருத்திப் பதியுங்கள். வாழ்த்துக்கள் 23-Jun-2015 7:56 pm
குவளை தொட்டு
நீர் அருந்த முடியாத நிலை
பத்திரம் தொட்டால்
பட்டு விடுமாம் தீட்டு
என் சாதி மக்கள் உழுத வயலுக்கும்
கலை பறித்த நெல்லுக்கும்
கறந்த பாலுக்கும் மட்டும் படுவதேயில்லை போலும்?
அவர்கள் சொல்லும் தீட்டு
இந்த சாதி என்னும் சனி இம்மண்ணை விட்டு சாகாது போலும் ....அருமை நட்பே... 23-Jun-2015 4:33 pm