எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறந்த கவிதைகள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன.

தயவு செய்து பகிருங்கள்.

மேலும்

படைப்புகள் கவிதை/கதை/நகைச்சுவை/ஓவியம்...என எதுவாக இருந்தாலும்...தள உறுப்பினர்கள் தரும் கருத்தக்களை விடவா...வேறு சிறந்த பரிசு இருக்க முடியுமா? அதன் தரம் என்னவென்று அறிய அவர்களே சாட்சி. உங்கள் கருத்துக்கள் எனக்கும் தோன்றியதுண்டு. அதனால், அறிவிக்கப்படும் தேர்வுமுறைகள் குறித்து...No more comments ! 18-Oct-2015 9:11 am
நன்றி தங்கள் பகிர்வுக்கு! 1. எழுத்து.காம் சிறந்த கவிதை தேர்வு பற்றியும் தான் நான் கேட்டேன். ஒருமுறை படிப்பதற்கு கூட பிடிக்காத கவிதை சிறந்த கவிதையில் 2, 3 நாட்களுக்கு முதல் பக்கத்தில் காண்பிக்கப்படுகிறது. வெறுப்பாய் இருக்கிறது சில நேரங்களில். 2. நல்ல கவிதைகள் பல புதிய படைப்புகள் பக்கத்தில் சிறிது நேரமே இருக்கிறது. 3. சிறந்த கவிதை தேர்வில் இடம் பெறுவதும் இல்லை. 4. காதல் கவிதை என்று எழுதப்படும் கிறுக்கல்கள் தான் சிறந்தவையா? 5. தயவு செய்து பாடுபொருள் எது என்பதை விட பாடப்பட்ட பொருளை பாருங்கள் தோழமைகளே! 6. மேலும் படைப்புகளை மட்டும் கவனியுங்கள். படைப்பாளிகளை பொறுத்து கவிதை அல்லாதவைகளையும் சிறந்தவை என்று முகாரம் பாடதீர். 17-Oct-2015 1:18 pm
பொய் தான் விருதுக்கு தேர்வு செய்யப் படுகிறது. எமக்குத் தொழில் கவிதை எழுதுவது என்று அரளும்(பீதி) வைரமுத்து அவர்களுக்கு சிறந்த கவிதைக்கான ஜனாதிபதி விருது....அது... 'கவிதைக்கு பொய் அழகு' அப்புறம்...என்ன வேண்டி இருக்கிறது கவிதை...உண்மை எல்லாம். அவர் சொல்வது...உண்மைக் கவிதை அசிங்கம்...பொய்க் கவிதை அழகு இனிக்கும் மிளகாய்...கசக்கும் கற்கண்டு...கடவுள்...கற்பனை... இது பொய் என்பார் அவர். 17-Oct-2015 12:14 pm
இது...இது தான் ஒப்பற்ற நிகரற்ற ஈடு இணை அற்ற அற்புதக் கேள்வி. எனது மனதில் எப்போதும் உதித்துக் கொண்டிருந்த அருமையான கேள்வி. பதில் சொல்லட்டும் தேர்வு செய்யும் உத்தம நீதிபதிகள். வாழிய நலம் !! 17-Oct-2015 11:59 am

மேலே