எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளே!!!! 
உன் , முகம் காண துடித்திடமாட்டேன்  
முகம் பார்த்தால் சிரித்திடமாட்டேன்  
கருவிழி பார்க்க பயந்திடமாட்டேன் 
கண்ணக்குழியுள் விழுந்திடமாட்டேன்  
மூச்சின் ஆழத்தில் மூழ்கிடமாட்டேன்  
இதழின் சுவையில் மயங்கிட மாட்டேன்  
முத்தம் நூறு கொடுத்திடமாட்டேன்  
கூந்தலின் அடர்த்தியில் சிக்கிட மாட்டேன்  
கைகள் கோர்த்து நடந்திட மாட்டேன்  
விரல் நகங்களை சேர்த்திடமாட்டேன்  
பாதம் பிடித்து தாங்கிட மாட்டேன்  
இம்மூரையேனும் இச்சபதத்தில் தோற்றிடமாட்டேன்!!

மேலும்

அவளும் நானும் 
அவள் துணையாய் நான் 
என் பலமாய் அவள் 
மௌனம் கொட்டி தீர்க்க 
கண்கள் மோதி பார்க்க 
கைகள் இணைய துடிக்க 
கால்கள் தரையில் மிதக்க 
மெல்ல எட்டி பார்க்கிறது காதல்!!

மேலும்

கண்ணை பறிக்கும் நிலவு 
கவிதை பாடும் அலைகள் 
காதல் கொஞ்சும் காற்று 
காலில் உரசும் நண்டு
மண்ணில் வரையும் கைகள்
எங்கோ தெரியும் வெள்ளி 
என் எதிரே இருக்கும் கன்னி 
தூக்கம் இல்லா இரவு 
நள்ளிரவை நெருங்கும் பொழுது 
மனம் மட்டும் 
என் தேவதையின் 
நிழல் காண ஏங்குகிறது!!!!

மேலும்

ஜன்னல் ஓரத்தில் நான் 
வெயிலும் இல்லை 
மழையும் இல்லை 
தாகம் தணிக்க நீறும் இல்லை 
பேருந்து கிளம்பி நேரம் ஆனது
 வேடிக்கை பார்ப்பதே வேலை ஆனது  
இயற்கை என்னை ஊற்று பார்த்தது 
ரசிக்க தெரியாத மக்கு என்றது 
சாலை கடக்கும்  தேவதைகளின் 
எண்ணிக்கை  நூறை தாண்ட 
பார்த்து சலித்து அலுத்து போன 
கண்கள் குட்டி தூக்கம் போட
கூச்சல் சத்தம் காதை கிழிக்க 
குட்டி தூக்கம் காற்றில் பறக்க 
இதமான காற்று 
இறுக்கமான மனது 
நெருக்கமான மக்களால் ஒதுக்கப்பட்ட ஓரத்தில் 
ஆம் ஜன்னல் ஓரத்தில் நான்...

மேலும்

இளமை ஒருநாள் முடிந்து போகும் 
அழகும் நம்மை கடந்து போகும் 
காமம் இடையில் பறந்து போகும் 
ஆட்டம் பாட்டம் அடங்கி போகும் 
பொறாமை ஆணவம் அழிந்து போகும் 
சண்டைகள் காதலின் சங்கீதமாகும் 
பொய்கள் கண்ணீரில் கரைந்து போகும்
சொந்தமெல்லாம் தூரமாகும் 
பார்வை குன்றி மங்கி போகும் 
தசைகள் சுருங்கி தொங்கி போகும் 
அன்பு ஒன்றே ஆறுதலாகும் 
காலபோக்கில் ஒரு காதல் பயணம் 
மரணம் ஒன்றே முடிவு தரணும் 
மரணம் வரையில் நீ என் துணையாய் வரணும்!

மேலும்

நன்றிகள் பல 14-Dec-2019 10:54 am
அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்துக்கள் மனிதனின் வாழ்வியலை அழகான வரிகளுக்குள் அடக்கி விட்டிர்கள்.... 12-Dec-2019 10:46 am

இளமை ஒருநாள் முடிந்து போகும் 
அழகும் நம்மை கடந்து போகும் 
காமம் இடையில் பறந்து போகும் 
ஆட்டம் பாட்டம் அடங்கி போகும் 
பொறாமை ஆணவம் அழிந்து போகும் 
சண்டைகள் காதலின் சங்கீதமாகும் 
பொய்கள் கண்ணீரில் கரைந்து போகும்
சொந்தமெல்லாம் தூரமாகும் 
பார்வை குன்றி மங்கி போகும் 
தசைகள் சுருங்கி தொங்கி போகும் 
அன்பு ஒன்றே ஆறுதலாகும் 
காலபோக்கில் ஒரு காதல் பயணம் 
மரணம் ஒன்றே முடிவு தரணும் 
மரணம் வரையில் நீ என் துணையாய் வரணும்!

மேலும்


மேலே