எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மனம் எனும்
காட்டில் பூத்து
மறைந்திடும்
எண்ணப் பூக்கள்
தினம்
ஒரு வண்ணம் காட்டும்
தேடிடத்
தொலைந்து போகும் .
நிறங்களில்
நிலைத்து நிற்கும்
நேர்த்தியாய்
ஒன்றைக் கொய்து
வளம் தரும்
மையில் தோய்த்து
வார்த்தையாய்
வழி நடாத்தி
திறம்படத்
தாளில் தீட்ட
தேர்ந்திட்ட
படிமம் சேர்த்து
உளம் பல
கவரச் செய்ய
உருவக அணிகள் சூட்டி
நயம் பட வடித்த
பாட்டில்
நல் இசைச்
சந்தம்
சேர்த்து
வளம் கொடு குரல்
இசைக்க
வரம் ஒன்று
கிடைக்க வேண்டும்...
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை..
பாரத சமுதாயம் வாழ்கவே!!
எழுத்துத் தள நட்புக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
கூடவே கீழுள்ள இணைப்பிலுள்ள புரட்சிக் கவிஞர் பாரதி பாடலை O .S அருண் அவர்களின் குரலில் ஒரு தடவை கேட்டுச் செல்லுங்கள் ...
https://www.youtube.com/watch?v=roMLxJVmb_s
சாராய கங்கையில்
சதா நீராடி
பாராயணம் பண்ணும்
பக்த கோ(கு )டிகளே
உமைக் காக்க
நீராகாரம் இன்றி
நீண்ட வழி
சென்றுவிட்ட
நீதியின் சுடர் பற்றி
தீராராத
வெறி கொண்டு
திடமான
கொள்கையுடன் ஊர்
ஊராகப் பற்றி
எரிகிறது
ஒரு நெருப்பு..
ஏழையாய்ப் பிறந்திட்டாலும்
ஏணியாய் உயர்ந்து நிற்க
நாளிதழ் கொடுத்துக் கற்று
நாட்டினை உயர வைத்து
எளிமையே உருவம் கொண்டு
இலட்சியம் இமையம் தொட்டு
பழமையையை மதித்து நின்று
பைந்தமிழ் கவிஞனாகி
குறளினை உலகமெல்லாம்
குறையின்றி ஒலிக்கச் செய்து-தமிழன்
புகழினை விண்ணில் சேர்த்த
பார் போற்றிடும் மேதையாகி
அறமது தவறிடாது
அரசியல் ஆட்சி நின்று
நெறிமுறை வழுவா நெஞ்சில்
நேர்மையை நிலை நிறுத்தி
மதங்களைக் கடந்து நின்று
மக்களின் தலைவனாகி
இல்லறம் துறந்து நின்று -எம்
இதயத்தில் வாழ்ந்து என்றும்
வல்லமை எமக்களித்து
வான் வரை உயர்ந்து நின்ற
அனலது தீண்டா அந்த
அக்கி (...)
வேதியலின் விந்தைகள் ...
எரியுறு
அமிலம்
ஒன்றும்
கொதியுறு
காரம்
ஒன்றும்
இயல்புறு
முறையில்கூடி
இணைந்து
சீர் வடிவம்
பெற்று
திரை கடல்
ஊறும் உப்பாய்
தீங்குறாத்
தன்மை பெற்று
சுவை தர
உணவில்
சேர்ந்து
தன சிறப்பினை
உரைக்கும்
நாவில்....
மறையுறு
மையம் பற்றி
மாறிடாத்
தூரம் சார்ந்து
செறிவுறு
நெறிகள் செப்பி
செம்மையாய்
அசையும் செய்யுள்
தொலையுறு பரிதி
காலும்
தீர்ந்திடா
ஒளியின் கீற்றாய்
நலிவுறு இருளை
நீக்கி
நாளெல்லாம்
வாழுமன்றோ...
எழுத்துத் தள நட்புக்களுக்கு .... உங்களால் முடிந்த சிறு உதவி இவர்கள் வாழ்வை மாற்றலாம் ... சிறு துளி பெரு வெள்ளம் ...
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் மேட்டூர் வடக்கு தெருவில் வசிக்கும் மஹபூப்கான் மனைவி சர்தார்னி
இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
1.வாஹித்கான் வயது-21 படிப்பு 10, 2.அம்ஜத்கான் வயது-18 படிப்பு 7, 3.சாரூக்கான் வயது-15 படிப்பு 6, இம்மூன்று குழைந்தைகளுக்கும் கடந்த 7 ஆண்டு காலமாக ஒன்றின் பின் ஒன்றாக மூவருக்கும் தொடர்ந்து பக்கவாதம் நோய் தாக்கி படுத்த படுக்கையாக இருப்பதினால் மருத்துவ சிகிச்சை செய்ய இயலாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு க (...)
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா....
https://www.youtube.com/watch?v=2dpnbkBZFrE
காலத்தால் அழியாத கானத்தின் சாயலில் இன்னொன்று
கண்கள் இரண்டால் தேடிய அதே ராகம்
https://www.youtube.com/watch?v=5GFug7895K8
அழகிய கானம்
ஒன்று
அபூர்வ
ராகத்தில்
ஆரம்பித்து
ஆனந்த ராகமாய்
பயணித்து
அற்புத ராக
சங்கமங்களின்
ராகமாலிகையாகி
அதிசய ராகமாகிறது
இங்கே அந்த அதிசய ராகம்....
https://www.youtube.com/watch?v=H5nFSVMxK20