எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நல்ல முயற்சி . முன்னேற்றத்தின் சாட்சி.
வாழ்த்துகள்
அகன்
ஏன் இங்கு copy paste செய்ய முடியவில்லை ? எனக்கு மட்டுமா > அன்றி எவருக்குமா?
இன்று கிணத்தகடவு சென்று வந்தேன் . உடன் கவிஜியும் , சேகுவாரா கோபியும்.
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
நடமாடும் நதிகள் --அகன்
இன்று உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் எழுதப்படுகிற ஒரு கவிதை வடிவமாகவும் கவிதை வகைமையாவும் இருப்பது ஜப்பானிய ஹைகூ கவிதை. ஜெர்மன், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்ச்சுக்கீசு, இத்தாலியம் மற்றும் பல இந்திய, ஆசிய, இலத்தீன் அமெரிக்க மொழிகளில் ஹைகூ தனது இடத்தை நிறுவிக் கொண்டுள்ளது. ஹைகூ, இப்படி உலகம் எங்கும் பரவியிருப்பது அது பிறப்பெடுத்த ஜப்பானிய மொழி மூலமாக அன்று. ஆங்கிலத்தின் மூலமாகவே ஹைகூ எல்லாத் திசைகளையும் எட்டியுள்ளது.
ஜப்பானில் ஹைகூ பொறிக்கப்பட்ட கற்கள் நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் காணப்படுகின்றன. பெரும் படைப்பாளிகள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கவிதை உணர்வுத் தூண்டல் தேடி நெடும்பயணங்களில் வந்து தங்கிய இடங்களிலும், ஹைகூ கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பானிலிருந்துகூட, ஜப்பானிய ஹைகூ கவிதைகளுக்கென ஆங்கிலத்தில் ஏடுகள் நடத்தப்படுகின்றன.
எது ஹைகூ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன; என்றாலும் இன்னும் எந்த விளக்கமும் ஹைகூவை முழுமையாகத் தெரிவித்துவிட்டதாகத் கூறமுடியாது. இன்று ஜப்பானில் இருபது இலக்கத்துக்கும் மேற்பட்ட ஹைகூ கவிஞர்கள் உள்ளனர். செய்தித்தாள்கள் பெரும்பாலானவற்றில் ஹைகூவுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. ஏராளமான ஹைகூ கவிதைகள் வெளியீட்டிற்கும் விமர்சனத்திற்கும் வந்து குவிகின்றன. அறிஞர்கள் 17 அசைகள் கொண்ட ஒரு ஹைகூபற்றி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட விரிவுரை செய்கின்றனர்.”
1912இல் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் இரவீந்தரநாதர் ஜப்பானிய ஹைகூ சிலவற்றை மொழி பெயர்த்ததோடு தம் தாய்மொழியாகிய வங்காளமொழியில் சில ஹைகூ கவிதைகளைப் படைத்தும் உள்ளார்.
மெக்சிகோ நாட்டுக் கவிஞரும், அரசுத் தூதருமான ஜோஸ் யுவான் தப்லாடா 1900இல் ஜப்பானுக்குச் சென்றிருந்ததன் விளைவாக-ஹைகூ தாக்கத்திற்கு உள்ளானார். தப்லாடா புனைந்த ஒரு பிரெஞ்சு மொழிக் கவிதை ஹைகூவைச் சிறப்பான முறையில் அடையாளப்படுத்தியது. இவர்தான் இஸ்பானியக் கவிஞர்களை ஹைகூவின்பால் ஈர்த்தவர் என்று சொல்லலாம்.
ஜெர்மானியத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான ரில்கே `ஹைகாய்’ முயற்சியை 1920இல் செப்டம்பரில் பிரெஞ்சு மொழியில் செய்து, தோல்வி கண்டார். அதே ஆண்டு டிசம்பரில் அவர் ஜெர்மன் மொழியில் ஹைகூ முயற்சிசெய்து-சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருந்தபோதும் அவர் ஏறத்தாழ ஜப்பானிய ஹைகூவுக்கு நெருக்கமாக வந்துவிட்ட கவிதைகயைப் புனைந்தார்.
1929இல் கிரேக்கக் கவிஞன் ஜார்ஜ் செபரிசு-ஹைகாய் அறிமுகம் பெற்று முயன்றிருக்கிறார் என்பதை அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்ட அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மகாகவி சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்: “ 2011- ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் தாமஸ் திரான்ஸ்ட்ராமர் படைத்துள்ள, புரியாப் பெரும்புதிர்’ (The Great Enigma) என்ற படைப்பை அண்மையில் படித்தப்போது அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைகளை நான் கண்டேன். எனவே, உலகப் பெருங்கவிஞர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கவிதை வடிவம் / வகைமை ஹைகூ என்று நாம் கருதலாம்.”
இப்படி உலகெங்கும் பரவிவிட்ட ஹைகூவை, இலக்கிய வரலாறுகளும், தொகை நூல்களும் இனி விலக்கிவிட முடியாது. இலக்கிய வடிவம்தான் ஹைகூ என்று கருதுகிற சிலர் ‘ஹைகூவை எப்படித் தமிழில் எழுத முடியும்? வெண்பாவை ஆங்கிலத்தில் எழுத முடியுமா? என்று வினவுவர். 2008இல் மகாகவி ஈரோடு தமிழன்பன் கோலாலம்பூர் சென்றிருந்தபோது விடுதியோன்றில் நடந்த இலக்கியச் சந்திப்பில் ஈழத்துப் பேராசிரியர் நுஃமான் அவர்கள் இந்த வினாவை எழுப்பினர். மகாகவி அவருக்குச் சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்:
“ வெண்பா என்பது ஒரு கவிதை வடிவம் மட்டுமே. அது ஒரு கவிதை வகைமையன்று. ஆனால் ஹைகூ முதன்மையாக ஒரு கவிதை வகைமை; அப்புறம் ஒரு கவிதை வடிவமும்தான்! “ .
வடிவம் என்ற அளவுமட்டுமே ஹைகூவின் தன்மையாக இருப்பின் அது உலகம் முழுமையாயும் ஒருபோதும் பரவாது-பரவியிருக்கவும் முடியாது. அது, பின்பற்றத் தூண்டும், கவியுள்ளத்தில் மின்னல் பாய்ச்சும், படிப்பவனை ‘ஆகா’ என்னும் வியப்புணர்ச்சியுள் ஆழ்த்தும் ஒரு கவிதை வகைமை. படைத்தவனுக்குள் எழுந்த கவிதை-படிப்பவனைச் சேர்ந்து அவனுள் இருக்கும் கவிதையை எழச்செய்து விடும் என்ற செறிவியல் அடுக்குகளைத் தன்பால் கொண்டிருப்பது-ஹைகூ.
**************** நடமாடும் நதிகள் --அகன் ******************
1.தமிழ் நெல்லுக்குள்
தமிழகத்தில் ஆங்கில அரிசி
தனியார் பள்ளி.
2.தீக்குச்சி உரசலில் தீ
விறகில் வெப்பம்
விரலில் வெளிச்சம்
3.உளிகளோடு பாறைகள்
உறவில் சங்கமம்
உதிரியாய் சிலைகள்
4.வெப்ப உலையில் வினாக்கள்
வெந்து வழியும் விடைகள்
வகுப்பில் ஆசிரியன்.
5.காலடிச் சுவடுகள்
நிலத்தரை எங்கும்
திசை காட்டும் சின்னங்கள்
6. தழைத்த தமிழ்காட்டில்
குருத்துமுறிந்த போன்சாய்
- ஹைக்கூ கவிதைகள்
7.தூண்டில் நுனிபுழுக்கள்
மீன்கள் வயிற்றில் தீனி
எச்சில் இலைகளில் எலும்புகள்
8.மங்கள நிகழ்வுக்கு
வண்ண மய நெசவு
வெள்ளைப் புடவையில் நெசவாளி
9.மதிய உணவில் கொஞ்சமாய்
சத்துணவும் கடலைச் சுண்டலும்
பெரியதாய் வீடு ஆயாவுக்கு .
10.அறியாமை பர்தா விலகலும்
சிந்தனை விரல்களின் கிறுக்கலும்
வகுப்பறை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : 1. ஹைஜின்னா ..2. நள்ளிரவில் படம் அனுப்பிய ஒருங்கிணைப்பாளர் தோழர் தி . என் . முரளி
3. வாசிக்கும் உங்களுக்கும்
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்------------------------------------------------
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை
இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)
நீர் நிலைகளில் இத்தனை வகையா..?
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.(
நன்றி : முகநூல்