எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விதை நெல்லும் நீட் தேர்வும்...

உடல்வலி உள்ளத்தின் நோவு
மருண்ட திசைகள் 
புரியா மொழி
உறக்கம் மறுத்த இரவு
அச்சமூட்டிய பரிசோதனைகள்
நடுங்கிய விரல்கள் வழி 
நட்டு வைத்த விடைநாற்றுகள் ......
......இவற்றுக்கெல்லாம்தான் 
அப்பா காசு கொண்டுவந்திருந்தார்
-விதை நெல்லை விற்று....
அம்மாவின் பங்குக்கு தாலி....
அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள்.
தங்கையின் கண்களில் 
தமையனின்மருத்துவ ஒப்பனை 
ஒட்டிக்கிடக்க
ஊர்மாறி ஊர்வந்த அவன் 
“ நீட்”எழுதி 
பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற
வந்தனை வரவேற்றது 
விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன்
ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன்
விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை 
விரித்துப் பார்த்தான் 
வடை ஒன்று .....பிஞ்சிப்போய்
தன் பசிக்காய்.....??!!!!! 

- அகன்

மேலும்

தோழர்களுக்கு  வணக்கமும் அன்பும். மீண்டும் வந்துள்ளேன் தொடர்கதை அளித்திட...... 

அகன் 

மேலும்

தமிழன்பன் விருது 2016
@@@@@@@@## 
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு 
@@@@@@## 

நாள் 12.11.2016 
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் , 
இராஜா அண்ணாமலை புரம் 
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்) 

தோழர்களே.... 
வணக்கம். 
எழுத்து வீதியில் 
அலங்கார கோலமி்ட 
வாக்கியப் புள்ளிகள் தந்த 
உங்களுக்குக் களிப்புக் களிம்பு 
பூச அழைக்கிறேன் .... 
வாரீர்... 
உங்கள் விரல்களைத் தமிழால் அலங்கரித்து மகிழ அழைக்கிறேன் வாரீர்...

உங்கள் 
கற்பனைப் பறவைகள் 
நூல் வானில் பறப்பதையும் 
காண வாருங்கள்..... 

பிற மொழி கலப்பின்றி 
நம்தாய் மொழிப்பேணுவோமென 
இரத்த அணுக்களில் 
நாம் இணைந்து 
சத்தமாய் 
எழுதி வைப்போம் இனி. ..... 

வாருங்கள் 
ஒரு புன்னகையோடும் 
ஒரு கைகுலுக்கலோடும் 

முகநூலின் மணம்வீசிய உங்கள் 
கவிமலர் பதித்த பாதிப்புகள் 
ஒரு பூங்கொத்தாய் 
உங்கள் விரல்களுக்குள்... 
நூலாய் ...விருதாய்...!! 
பூத்த நூறு பூக்களை 
ஒரே ­ கொத்தாய் 
ஒரு நூலாய் பெற்று இன்புறுங்கள்_ 
இதழ்களாய் உங்கள் உழைப்பு... 
பாராட்டாய் விருதளிப்பு... 

வெவ்வேறு மண்ணின் 
பறவைக் கூட்டம் 
தத்தம் கூடுகளோடு 
ஒன்றாய் ஒரே வானில் ( சென்னையில்) 
நீந்திடும் நிதர்சன பொழுது 
விடியப்போகிறது 12.11.16 இல் 
வாருங்கள்…! 

தமிழன்பன் _80 விருதுகள்: 

சீதா ரவி (இதழியல்) 
கமல்காளிதாஸ் 
( வடிவமைப்பாளர்) 
Dr. கோபி ( யாழ் அரங்கம்) 
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு) 
கே.ஆர் இராசேந்திரன் (கவிதை மற்றும் வேளாண்மை) 
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்) 
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்) 

கவிதை: 
நிஷா மன்சூர், மேட்டுப்பாளையம் 
உமா மோகன் , புதுச்சேரி 
அ.வெண்ணிலா , வாணியம்பாடி 
சந்துரு, சென்னை 
கோவை அறச்செல்வி, 
கரு கரிகாலன் , 
காளி குருவி , (வாழ்வியல் கவிதை) 
நஸீஹா மொஹைதீன் , 
இவன் தங்கா, 
வளவன் கரிகாலன் 
ஆன்மன், 
சுரேஷ் பரதன் ,தில்லி 
முகமது சலீம் 
முருகன் சுந்தரபாண்டியன் 
றாம் சங்கரி, 
இளங்கவி அருள்செல்வன் , புதுச்சேரி 
மயிலாடுதுறை இளையபாரதி , 

( எழுத்து்.காம்) 

பொ.சாந்தி, சென்னை 
சியாமளா ராஜசேகர்,( மரபுக் கவிதை) 
நிலாகண்ணன் ,சென்னை 
மகிழினி, கோவை 
வீ .திலகவதி, திருவனந்தபுரம் 
வளர்மதி, மதுரை 
மு .ரா ( விமர்சனம்) 
அமுதா அம்மு , சென்னை 
பனிமலர், சென்னை 
ஜெயாராஜரத்தினம் , திருச்சி 
எ கே கார்த்திகா, 
குமார் பாலகிருஷ்ணன், திருப்பூர் 

வெளிநாட்டுப் படைப்பாளிகள்:( கவிதை) 
முனியாண்டி ராஜ் , 
முகமது பாட்சா , 
சுதந்திரன், , 
மீயாழ் செல்வன், 
தருமராஜ் பெரியசாமி 
நுஸ்கி மு எ.மு, ( எழுத்து்.காம்) 
கே.இனியவன், ( எழுத்து்.காம் 
கயல்விழி, ( எழுத்து்.காம் 
முதல்பூ ( எழுத்து்.காம் 

சா.சரவணன் ( நூல் கட்டமைப்பாளர்) 
பெ.மயிலவேலன் (பதிப்பாளர்) 

கல்வி: 
ஆசிரியர் ராஜேஷ் நரசிம்மன், ( கற்பித்தல் வகைமைகள்) ஆசிரியர் சசிகுமார் ( பள்ளி பராமரிப்பு), 
ஆசிரியர் இராஜலட்சுமி, ( உரைவீச்சு) 
ஆசிரியர் பூபாலன் சுரேந்தர் ( சுற்றுச்சூழல் & பறவை பேணுதல்) 

ஓவியம்: 
ஓவியர் உமாபதி , 
ஓவியர் இளமுருகன் , 
ஓவியர் ஆனந்தராஜ் , 
ஓவியர் இராஜாகண்ணன் , , 

நிழற்படக் கலை: 
பாஸ்கர் , 
அருண் 
சேகர். 
வெங்கிட்டு 
சிங்காரவேல்

மேலும்

நன்றி தோழர் 12-Oct-2016 6:01 pm
தோழர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு இச்செய்தியை பகிரவும்... விருது வாங்கும் அனைவருக்கும் இந்த நற்செய்தி விரைந்து சென்றடைதல் நலம்.... 11-Oct-2016 9:28 pm

நல்ல முயற்சி . முன்னேற்றத்தின் சாட்சி.
வாழ்த்துகள்
அகன்

மேலும்

ஏன் இங்கு copy paste செய்ய முடியவில்லை ? எனக்கு மட்டுமா > அன்றி எவருக்குமா?

மேலும்

எழுத்து தளம் வெளிநாட்டில் இருந்தும் தொடர்பு கொள்ள சிரமமாயுள்ளது . எப்படியோ இரவிலாவது தொடர்பு கொண்டால் தான் நிம்மதி நன்றி . 23-Feb-2016 1:38 am
வருகிறது. சிறிது சிரமப்பட வேண்டியுள்ளது. 22-Feb-2016 8:15 am

இன்று கிணத்தகடவு சென்று வந்தேன் . உடன் கவிஜியும் , சேகுவாரா கோபியும். 


தோழர் அபியின் ஆதலினால் காதலித்தேன் நூல் மறுவாசிப்பும் , விசாரணை படத்தின் மூலகதை எழுதிய தோழர் சந்திரகுமாருடன் ஓர் கலந்துரையாடலும் என் விழா அமைந்திருந்தது. 

காதல் மணம் புரிந்து சாதனை செய்த அபியின் மண பதிவுக்கு ஒப்பமிட்டவர் சந்திரகுமார் . நூலாக்கியவன் நான் . இன்று காதலர் நாள் . எல்லாம் பொருந்தி வந்தது.

அபியின் நாவல் அல்ல அந்த நூல் : அவர் வாழ்க்கை. 

விசாரணை ஒரு  படக்கதை அல்ல : அது சந்திரகுமாரின் நிஜ வாதை. 

நிஜங்கள் இரண்டும் நிழலாகி பதிவாகின. 

நீண்ட நேரம் விழாவில் இருந்திட இயலா சூழலில் உழைப்பாளன் பானம் அருந்தி விடைப்பெற்றோம் .

மேலும்

தோழர் அபி அவர்களின் நாவல் வாசித்தப்போது அவரின் பல்வேறு சிந்தனை தளங்களை அறிந்து வியந்தேன். விசாரணை ஒரு படக்கதை அல்ல : அது சந்திரகுமாரின் நிஜ வாதை. // எனக்கு இது புதிய செய்தி. கிணத்துக்கடவுக்கும்.. திருப்பூருக்கும் தொலைவு குறைவுதான் ஐயா. ஏனோ உங்கள் உடன் வர கொடுத்து வைக்கவில்லை. 15-Feb-2016 1:22 am

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?


நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி 

இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

மேலும்

நன்று, நன்றி ஐயா - மு.ரா. 07-Feb-2016 10:18 am



நடமாடும் நதிகள் --அகன்


இன்று உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் எழுதப்படுகிற ஒரு கவிதை வடிவமாகவும் கவிதை வகைமையாவும் இருப்பது ஜப்பானிய ஹைகூ கவிதை. ஜெர்மன், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்ச்சுக்கீசு, இத்தாலியம் மற்றும் பல இந்திய, ஆசிய, இலத்தீன் அமெரிக்க மொழிகளில் ஹைகூ தனது இடத்தை நிறுவிக் கொண்டுள்ளது. ஹைகூ, இப்படி உலகம் எங்கும் பரவியிருப்பது அது பிறப்பெடுத்த ஜப்பானிய மொழி மூலமாக அன்று. ஆங்கிலத்தின் மூலமாகவே ஹைகூ எல்லாத் திசைகளையும் எட்டியுள்ளது.   

           ஜப்பானில் ஹைகூ பொறிக்கப்பட்ட கற்கள் நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் காணப்படுகின்றன. பெரும் படைப்பாளிகள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கவிதை உணர்வுத் தூண்டல் தேடி நெடும்பயணங்களில் வந்து தங்கிய இடங்களிலும், ஹைகூ கல்வெட்டுக்கள்  இடம் பெற்றுள்ளன. ஜப்பானிலிருந்துகூட, ஜப்பானிய ஹைகூ கவிதைகளுக்கென ஆங்கிலத்தில் ஏடுகள் நடத்தப்படுகின்றன.  

  எது ஹைகூ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன; என்றாலும் இன்னும் எந்த விளக்கமும் ஹைகூவை முழுமையாகத் தெரிவித்துவிட்டதாகத் கூறமுடியாது. இன்று ஜப்பானில் இருபது இலக்கத்துக்கும் மேற்பட்ட ஹைகூ கவிஞர்கள் உள்ளனர். செய்தித்தாள்கள் பெரும்பாலானவற்றில் ஹைகூவுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. ஏராளமான ஹைகூ கவிதைகள் வெளியீட்டிற்கும் விமர்சனத்திற்கும் வந்து குவிகின்றன.  அறிஞர்கள் 17 அசைகள் கொண்ட ஒரு ஹைகூபற்றி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட விரிவுரை செய்கின்றனர்.”      

      1912இல் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் இரவீந்தரநாதர் ஜப்பானிய ஹைகூ சிலவற்றை மொழி பெயர்த்ததோடு தம் தாய்மொழியாகிய வங்காளமொழியில் சில ஹைகூ கவிதைகளைப் படைத்தும் உள்ளார்.             

  மெக்சிகோ நாட்டுக் கவிஞரும், அரசுத் தூதருமான ஜோஸ் யுவான் தப்லாடா 1900இல் ஜப்பானுக்குச் சென்றிருந்ததன் விளைவாக-ஹைகூ தாக்கத்திற்கு உள்ளானார். தப்லாடா புனைந்த ஒரு பிரெஞ்சு மொழிக் கவிதை ஹைகூவைச் சிறப்பான முறையில் அடையாளப்படுத்தியது. இவர்தான் இஸ்பானியக் கவிஞர்களை ஹைகூவின்பால் ஈர்த்தவர் என்று சொல்லலாம்.        

    ஜெர்மானியத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான ரில்கே `ஹைகாய்’ முயற்சியை 1920இல் செப்டம்பரில் பிரெஞ்சு மொழியில் செய்து, தோல்வி கண்டார். அதே ஆண்டு டிசம்பரில் அவர் ஜெர்மன் மொழியில் ஹைகூ முயற்சிசெய்து-சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருந்தபோதும் அவர் ஏறத்தாழ ஜப்பானிய ஹைகூவுக்கு நெருக்கமாக வந்துவிட்ட கவிதைகயைப் புனைந்தார்.   

                1929இல் கிரேக்கக் கவிஞன் ஜார்ஜ் செபரிசு-ஹைகாய் அறிமுகம் பெற்று    முயன்றிருக்கிறார் என்பதை அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்ட அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.              

 மகாகவி சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்:  “ 2011- ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் தாமஸ் திரான்ஸ்ட்ராமர் படைத்துள்ள, புரியாப் பெரும்புதிர்’ (The Great Enigma) என்ற படைப்பை அண்மையில் படித்தப்போது அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைகளை நான் கண்டேன். எனவே, உலகப் பெருங்கவிஞர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கவிதை வடிவம் / வகைமை ஹைகூ என்று நாம் கருதலாம்.”

இப்படி உலகெங்கும் பரவிவிட்ட ஹைகூவை, இலக்கிய வரலாறுகளும், தொகை நூல்களும் இனி விலக்கிவிட முடியாது. இலக்கிய வடிவம்தான் ஹைகூ என்று கருதுகிற சிலர் ‘ஹைகூவை எப்படித் தமிழில் எழுத முடியும்? வெண்பாவை ஆங்கிலத்தில் எழுத முடியுமா? என்று வினவுவர். 2008இல் மகாகவி ஈரோடு தமிழன்பன்  கோலாலம்பூர் சென்றிருந்தபோது விடுதியோன்றில் நடந்த இலக்கியச் சந்திப்பில் ஈழத்துப் பேராசிரியர் நுஃமான் அவர்கள்  இந்த வினாவை எழுப்பினர். மகாகவி அவருக்குச் சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்:

 “ வெண்பா என்பது ஒரு கவிதை வடிவம் மட்டுமே. அது ஒரு கவிதை வகைமையன்று. ஆனால் ஹைகூ முதன்மையாக ஒரு கவிதை வகைமை; அப்புறம் ஒரு கவிதை வடிவமும்தான்! “ .        

 வடிவம் என்ற அளவுமட்டுமே ஹைகூவின் தன்மையாக இருப்பின் அது உலகம் முழுமையாயும் ஒருபோதும் பரவாது-பரவியிருக்கவும் முடியாது. அது, பின்பற்றத் தூண்டும், கவியுள்ளத்தில் மின்னல் பாய்ச்சும், படிப்பவனை ‘ஆகா’ என்னும் வியப்புணர்ச்சியுள் ஆழ்த்தும் ஒரு கவிதை வகைமை. படைத்தவனுக்குள் எழுந்த கவிதை-படிப்பவனைச் சேர்ந்து அவனுள் இருக்கும் கவிதையை எழச்செய்து விடும் என்ற செறிவியல் அடுக்குகளைத் தன்பால் கொண்டிருப்பது-ஹைகூ.


****************      நடமாடும் நதிகள் --அகன்  ******************

1.தமிழ் நெல்லுக்குள்
தமிழகத்தில் ஆங்கில அரிசி
தனியார் பள்ளி.


2.தீக்குச்சி உரசலில் தீ
விறகில் வெப்பம்
விரலில் வெளிச்சம்


3.உளிகளோடு பாறைகள்
உறவில் சங்கமம்
உதிரியாய் சிலைகள்


4.வெப்ப உலையில் வினாக்கள்
வெந்து வழியும் விடைகள்
வகுப்பில் ஆசிரியன்.


5.காலடிச் சுவடுகள்
நிலத்தரை எங்கும்
திசை காட்டும் சின்னங்கள்


6. தழைத்த தமிழ்காட்டில்
குருத்துமுறிந்த போன்சாய்
- ஹைக்கூ கவிதைகள்


7.தூண்டில் நுனிபுழுக்கள்
மீன்கள் வயிற்றில் தீனி
எச்சில் இலைகளில் எலும்புகள்


8.மங்கள நிகழ்வுக்கு
வண்ண மய நெசவு
வெள்ளைப் புடவையில் நெசவாளி


9.மதிய உணவில் கொஞ்சமாய்
சத்துணவும் கடலைச் சுண்டலும்
பெரியதாய் வீடு ஆயாவுக்கு .


10.அறியாமை பர்தா விலகலும்
சிந்தனை விரல்களின் கிறுக்கலும்
வகுப்பறை


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : 1. ஹைஜின்னா ..2. நள்ளிரவில் படம் அனுப்பிய ஒருங்கிணைப்பாளர் தோழர் தி . என் . முரளி
3. வாசிக்கும் உங்களுக்கும்

மேலும்

Excellent sir. Big messages given or made by small lines. 06-Feb-2016 8:04 am

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்------------------------------------------------


-----1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. 

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.

சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.

அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். 

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. 

இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை
இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.

சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். 

உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)


நன்றி : முகநூல் 

மேலும்

அருமையான தகவல்கள்..பயனுள்ள பகிர்வு.. 05-Feb-2016 1:14 pm
தமிழனின் வரலாற்று பொக்கிசத்தில் இருந்து ஒரு துளி, அருமையான பகிர்விற்கு நன்றிகள் பல ஐயா - மு.ரா. 05-Feb-2016 8:37 am
சொந்த ஊரில் வாழமுடியாமல் விரட்டப்படுகிறான். ஊரின் பெயரை எடுத்துவருவது ஊரையே பெயர்த்தெடுத்து வருவதாய் உணர்கிறான். பயனுள்ள தகவல் 05-Feb-2016 8:17 am

நீர் நிலைகளில் இத்தனை வகையா..? 
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.(

2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.(
4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.(
7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
.(12) கடல் (Sea) - சமுத்திரம்
.(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.(
15) கால் (Channel) - நீரோடும் வழி.(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
.(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
.(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.(
20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
.(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குகொப்பளித்து வரும் ஊற்று.(
23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
.(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
.(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.(
30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்
.(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை
.(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.(
34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
.(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு
.(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
.(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.(
43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை
.(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
.(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்
.(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.


அடேங்கப்பா ! நீர் நிலைகளில் இத்தனை வகையா? 

பாதுகாப்போம் நீர் நிலைகளை!

நன்றி : முகநூல்

மேலும்

அருமையான பகிர்வுக்கு நன்றி🙏 05-Feb-2016 4:59 am
நன்று, பகிர்வுக்கு நன்றிகள் ஐயா - மு.ரா. 04-Feb-2016 7:42 pm
மேலும்...

மேலே