எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு கண்மணி,

நீ நலமாக இருப்பதாக நேற்று உன்னை பார்த்து வந்த  அப்பா கூறினார் மிகவும் மகிழ்ச்சி.  நீ நலமாக  இருப்பதை விட நிம்மதியோ நிறைவோ வேறெதுவும் தந்து விட போவதில்லை எனக்கு.  நாங்களும் நலம். சிறகு விரிக்கும் இளமையில் காலடி வைத்திருக்கிறாய் . பருவ காலம் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் உகந்த காலம் கண்ணே.

என்னடா அம்மா இப்படி கூறுகிறாளே என்றெண்ணாதே . நீ உலகின் முக்கிய சக்தியான 'பெண்'.  நீ பெண்ணாக பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும் உன் அப்பாவிற்கும்.  உனக்கு பெயர் வைக்க போட்டி போட்டு சிந்தித்தோம் எங்களின் சக்தியாக இருக்கும் உனக்கு சக்தி  எனும் பெயரே பொருத்தமானதாக இருக்கும் என்று தேர்வு செய்தோம். எங்க சக்திடா நீ.

இருக்கும் விநாடிகளை அப்படியே ஏற்றுக்கொள்.  எதிர் வர  இருக்கும் பொழுதுகளைக்  கொண்டாடு..  மகிழ்வு மட்டுமல்ல துக்கமும் சேர்ந்தே கொண்டாட  கற்றுக் கொள்.  அதுவாகவே மாறி விடு தெளிவு பிறக்கும். என்றும் குழப்பமான மனநிலை வைத்துக் கொள்ளாதே. நண்பர்களை போற்று. நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இங்கு நண்பர்கள்  என்று கூறியது ஆண் ,பெண் ,திருநங்கை  அனைவரையும்தான் .

நான் வளர்ந்த நாட்களில் எனக்கு  ஆண்  என்பது வேற்றுக்கிரகவாசியாக  உணர்த்தப்பட்டது. வெளி உலக சிந்தனையோ , பரந்த  அறிவோ,  ஆண் பற்றிய புரிதலோ துளியுமின்றிதான் நான் திருமண வாழ்வில்  அடியெடுத்து வைத்தேன். உடல் மன ரீதியிலான எந்த தெளிவும் இல்லை.  இதனால் சில சிக்கல்களும் , சங்கடங்களும் காலங்களோடு கடந்து சென்றது. உனக்கு  அந்நிலை வேண்டாம் என் கண்ணே.  நீ உன் உடலை முழுமையாக உணர்ந்து கொள்.  
மனதை குப்பைக் கூடையாக்காமல் வரும் துன்பங்களை வலிகளைக் கடந்து விடு. அவற்றை பாடமாக வைத்துக் கொள். 

வசந்த காலம் தொடங்கி விட்டது.  வசந்த கால காற்றும் பூக்களும் உன்னை பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன.  உன் நண்பர்களுக்கும் உன்னைச் சுற்றியுள்ள உலகிற்கும் நீ ஒரு சக்தியாகவே இருந்திடு.  உனது,  உன்னுடையது மட்டும் என்று  உயிர்களிடத்தில்  உரிமை,  ஆசை கொள்ளாதே அன்பு மகளே நீ அன்பு செலுத்தும் உயிர் எதுவாயினும் நலம் பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டு பழகிடு.  உனது நட்பு அனைவருக்கும் மதிப்பு மிக்கதாகவும்,  எளிமையானதாகவும்,  இணக்கமானதாகவும் இருக்க வேண்டும்.

உனது மாதவிலக்கு சுழற்சியில் தொடரும் வலிக்கு தற்போது என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டாய்?  இதற்கு  இயற்கை முறையில்  ஆன மருந்து பற்றி  உன் நண்பன் பரிந்துரைத்ததாகக் கூறினாய்.  அவன் கூறிய மருந்து பற்றி  எனக்கு  எழுது நான் இங்குள்ள சித்த வைத்திய சாலையில் விசாரித்து கூறுகிறேன்.

ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பில் காலடி வைத்திருக்கிறாய்.  பாடங்களை விரும்பி புரிந்து மகிழ்வான மனநிலையில் படி.  மதிப்பெண் குதிரையில் ஏறி பயணிக்காதே. 
உன் நண்பர்கள்  அனைவரையும் விசாரித்ததாகக் கூறு. 
உங்கள்  அனைவருக்கும் எனது அன்பும் ஆசியும்.

அன்பு முத்தங்களுடன்
        உன்    அம்மா

பின்குறிப்பு : இங்கு நீ வைத்த ரோஜாச்செடி பூத்திருக்கிறது. ரோஜாக்களுடன் நாங்களும்  உன் வரவை எதிர் நோக்கி. ..


அகராதி 

மேலும்



பார்த்த ஞாபகம் இல்லையோ

மனதை ஈர்க்கும் இசை, கவிஞரின் சொல் விளையாட்டு, காட்சியமைப்பின் கவர்ச்சி, நடிகர்களின் ஒய்யாரம்...  அழகு அழகு  அழகு. ....
ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்   .  நீங்கள் இதை படிக்கும் இந்த நிமிடத்திற்குள் பார்த்த  எண்ணிக்கை  இன்னும் அதிகரித்திருக்கும்.
அப்படி பிடிக்கும்.  

கிளப் ஒன்றில் சிவாஜி செழுமையான தோற்றத்துடன் கோட் சூட்டில் அமர்ந்து  இருப்பார். முதலில் அவரது பக்கவாட்டு தோற்றத்துடன் நெருக்கமாக தெரிவார். வாயில் நீண்ட  சிகரெட்  (அந்த காலத்தில் வசதி படைத்தவர்கள் உபயோகிக்கும் சுருட்டு ?! )  லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறார் இசை ஒலிக்க ஆரம்பிக்கிறது.  மெல்லிய வெளிச்சத்தில் அவர் வாயிலிருந்து ஊதப்பட்ட புகை ஏவுகணை சென்ற வான்வழி போல் புகை பாதை போடுகிறது பரவுகிறது.  மிடுக்குடன் அமர்ந்து பார்க்கிறார் .அப்புகையும் மிடுக்குடனே பரவும் தோற்றத்தை அளிக்கிறது சிவாஜி கணேசனின் மிடுக்கு. 
இசை டடட்டட்டட. ..டடட்டட்டட ஆறே பேர் கொண்ட  குழு அனைவரும் பெண்கள்  (ஃபுளோர் டச் அனார்கலி சுடிதார் போன்று ) பாதம் தொடும் நீண்ட கவுன் அணிந்து அசைகின்றனர் இசைக்கேற்ப நளினமாக மென்மையாக  (ஒரு பீட்டுககு பத்து ஸ்டெப்பும் அதனை முடிக்க வேண்டும் என்ற பதட்டமும் இல்லாமல் எலும்பு முறிவுக்கான முயற்சி  இல்லாமல் ) அறுவரும் நிறைக்கின்றனர் .

மேடையில் செளகார் ஜானகி நமது  அம்மா அக்கா தங்கை தோழி அணிவதைப் போன்றே பிளவுஸ் அணிந்திருப்பார் புடவை உடுத்தியிருப்பார். என்ன ஒன்று வித்தியாசமாகச் சுற்றி நவீனமாக உடல் முழுவதும் மறைக்கும் கருமை நிற உடையில் கையில் மைக்குடன்  மேடைக்கு வருகிறார். முன் தலையில் சிறிய கிரீடம் அவர் சிரிப்புடன் பளீரிடுகிறது. 
ஒய்யாரமாக சிரிப்புடன் நின்ற நிலையில் மெலிதாக உடல் முழுவதும் முன் பின் அசைக்கிறார் பாடிக்கொண்டே. ..சிறு சிறு அசைவுகள் ஒய்யாரம் புன்னகை தெளிந்த நீரோட்டமான  இசை நம்மை உள் இழுத்துச் செல்லத் தொடங்கி விடுகிறது.

தலைவரோ  (சிவாஜி ) ஆழ்ந்து இழுத்து புகையை இரசித்து விடுகிறார். அது பழையபடி  ஏவுகணை வழித்தடமாக மாறுகிறது. பல்வேறு  இசைக்கருவிகள் இசைக்கலைஞர்கள் மேடையில் இருந்து இன்பமாக்க. ..
நீலநதிக்கரையோரம் பற்றி நாயகி பாடுகிறார் அசைவுகளோடு குழு அழகாய் திட்டமிட்ட  நடன  அசைவுகளை கொடுக்கிறது ரம்மியமான மேடை. 
பாடிக்கொண்டே உடலைச் சற்று பின் சாய்த்து முன் விரைந்து  செல்கிறார் நாயகி . சென்று மேடையின் மறுபுறம் இருந்து வருகிறார்.

பழகி வந்த சில காலம்  மறக்கையில்... தலைவர் மதுக்கோப்பையை நாகரிகமாக  உதட்டிற்கு கொடுக்கிறார். உதடும் பாத்திரமேற்கிறது  வெளிச்சிந்துகிறது  இரசனையை   .  பார்வை மாறுகிறது  ஈர்க்கப்பட்டு வாய் திறந்து இரசிக்கிறார்  சிரிக்கிறார்  சுட்டுவிரல் வாயில் வைத்து கடிக்கிறார்  கவர்கிறார் பெரிய  மோதிரம் ஒளி வீசுகிறது அதைவிட அவர். .....
மறந்ததோ நெஞ்சம் என்று நாயகி மேடையின் ஒரு புறம் சென்று மறுபுறம் வருவதற்குள் தலைவர் தடுமாறுகிறார் தேடுகிறது பார்வை வாயில் சிகரெட்டுடன். ..இசைக்கருவிகள் பொழுதை இனிமையாக்க குழு அழகூட்டுகிறது அருமையாக.

நாயகி இரவையும் நிலவையும் கேட்கச் சொல்கையில் குழுப்பெண்கள் அறுவரும் இருவர் இருவராக மூன்று பிரிவாக பிரிந்து இசைக்கேற்ப ஆடுகின்றனர். ஹய்ய்யோ தலைவர் வெட்கச்சிரிப்பொன்றை வீசிக்கொல்கிறார்  அட்டகாசம் !  சிகரெட் புகையுடன் பரவுகிறது சிரிப்பும். ...
குழுவினர்  இணைந்து அசைந்து மகிழ்விக்கின்றனர் நேர் கோடாக மலராக  என்று. ...
நிலவு சந்திப்பு குறித்து பாடுகையில் கொஞ்சலும் சிரிப்புமான முகபாவத்தை அளித்து நடனம் பார்த்த நிறைவை அளிக்கிறார் செளகார்ஆடாமலே. ..

தலைவர் நாயகியை பார்வையாலும் மதுவை வாயாலும் பருகிக் கொண்டிருக்கிறார் .  இசை கொஞ்சம் உச்சஸ்தாயியில் ஒலிக்க குழுவினர் வட்டமாக நின்று  கைகோர்த்து விரைந்து சுற்ற செளகார் இரு கைகளையும் இரு புறமும் நீட்டி சற்றே குனிந்து சபை மரியாதை அளித்து முடிக்கிறார்.

அதற்குள் பாட்டு முடிஞ்சிடுச்சா என்ற  ஏக்கத்தை ஒவ்வாரு முறையும் அளிக்க வல்ல பாட்டு இது.

அகராதி

மேலும்



பற்கள் பற்றி சில வார்த்தைகள். ...

பல் பற்றிய பல சொலவடைகள் கேட்டுருப்போம் 
பொருத்தமா இருப்பதையும் உணர்ந்திருப்போம். 
பல் மருத்துவரிடம் சிகிச்சை தேவை என நினைத்து செல்வதாக இருந்தால் பலமுறை யோசித்து விசாரித்து செல்லுங்கள்.    "ரெண்டு  பேர் பேசுனா போதும் ஆ... என்று வாய பாத்துட்டு நிப்பியே" இப்படி நம்மில் பலர் பேச்சு வாங்கியிருப்போம்.   அப்படி பலராலும் கவனிக்க படக்கூடிய ஒண்ணுதான் பல்.  
அந்த பல்லை தேய்க்கிறேனு மர மரனு தேய்க்காதீங்க.  உங்க டூத் பேஸ்ட்ல  உப்பு இருக்கா கொத்தமல்லி இருக்கானு கேட்கிறாங்களேனு தாவாதீங்க பிராண்டுக்கு பிராண்ட். . உங்களுக்கே தெரியும் விளக்கறப்போ  எரிச்சல் இல்லாத மென்மையான வெண்மை நிற பற்பசையே தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்க.

ரொம்ப நேரமெல்லாம் தேய்ச்சுட்டு இருக்காதீங்க.  எஜமான் ரஜினி மாதிரி தேய்ச்சா பல் கட்டிக்க வேண்டியதுதான்.  அது  ஆல வேல குச்சிங்க காயமானாலும்  வைத்தியமே இல்லாமல் ஆறிடும்.   நம்முது முழுக்க கெமிக்கல்        2  நிமிக்ஷம் தேய்ச்சுட்டு வச்சிருங்க.

பற்கள் பாதுகாப்பு மற்றும் சுத்தத்திற்கு மிக முக்கிய செயல் நீரினால் வாய் கொப்பளிப்பது. கவனிக்க பீரினால் அல்ல நீரினால்.   அதற்காக பக்கத்துல  இருக்க பாகிஸ்தான் ராணுவமே எட்டி பார்க்கிற மாறி ஓவ். ....னு ஓங்காரமிட்டு கொப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.  சுத்தம் சத்தத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்க  .  எப்ப  என்ன சாப்பிட்டாலும் வாய் கொப்பளிங்க  உடனடியாக முடியலனா கொஞ்சம் நேரம் கழித்து செய்ங்க. ...இதான் 90 %சுத்தம் பாதுகாப்பு.  

மேலும்

உலக யோகா தினமெல்லாம் முடிந்தது பல்வேறு கருத்துகளுக்கு இடையில் . எல்லார் கருத்தும் முடிச்சு பின்னாடி தூங்கி எழுந்து நாம சொல்றதும் கருத்துதேன்.      யோகாவை ஆன்மிகமா பார்க்காதீர்கள். ஆன்மிகத்தை யோகாவோடு கலக்காதீங்க. யோகா அறிவியல் அறிவாற்றல் கொண்ட சித்தர்களால் உடலைப் படித்து அணு அணுவாய் அறிந்து நமக்கு கொடுக்கப்பட்ட கலை. யோகாவை ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி கொண்டாடுவது அவரவர் விருப்பம் ,கட்டாயமில்லை . சொல்ல விரும்பறது என்னன்னா ...மதம் கொள்ளாமல் மனம் கொண்டு உங்களைப் பேணுங்கள்.

மேலும்

வாழ்வின் சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் தணை நிற்பது நமக்கு நம் மனமேயின்றி வேறில்லை.... வேதனைதான் இந்நிலை எனினும் உண்மை இதுதான்

மேலும்

Www.agamonline .com அகம் வெப் மேகசின்ல என் ஸ்டோரி வந்துள்ளது படித்துகருத்திடுகங்கள்"ஆண்கள் எத்தனை ஆண்களடி" -அகராதி

மேலும்

http://www.pratilipi.com/read?id=5928333632077824&page=41
Read | அகல் மின்னிதழ் - 5 அக்டோபர் 2015 (Agal minnidhazh - 5 october 201) » Pratilipi
பெயரில் சூரியனைத் தாங்கிய அவரின் வயது ஐம்பது. தாய் தந்தையருடன் எங்கள் ஊரில் வசிக்கிறார். எங்கள் வீட்டைத் தாண்டி போகும் போதும் வரும் போதும் அந்த வயதான தாய் நிறைய பேசுவதுண்டு என்னிடம். பேசுவது எனில் வழக்கமான நலம் விசாரிப்பு, பேருக்கு இரண்டு வார்த்தை அல்ல. வாழ்வின் உண்மைகளை, கடந்து விட்ட நிகழ்வுகளை,…
pratilipi.com ·

மேலும்

பொருள்
இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை

மேலும்

உண்மைங்க..!! 01-Nov-2015 5:09 pm

பாரதி
பாரதி ஒப்பிடவே இயலாதவன்.மென்மையும் ,இனிமையும் ,கோபமும்,தாகமும் பெருக்கெடுத்த பேரறிஞன் . நாடு ,மக்கள் ,இயற்கை ,விலங்கு என அனைத்திலும் அக்கறையும் அன்பும் கொண்ட மகா கவிஞன் இசையிலும். தேரந்தவன்.
அவன் கவிதையில் பொங்கி வரும் காதல் உலக அருவிகளில் மிகப்பெரிய அருவியாகிக் கொட்டுகிறது அன்பை. அனைத்திலும் உயர் நிலை அடைந்த ஞாநியானான். பக்தியில் முழுகினான், கண்ணன் காதலனான். மிக எளிமையாய் இனிமையாய் அனைத்திலும் தான் கண்ட கண்ண்னை நம்மில் பதிய வைத்தான். "காயிலே புளிப்பதென்ன? கண்ண்பெருமானே! கனியிலே இனிப்பதென்ன ? கண்ணபெருமானே!" இனிப்பு புளிப்பு என அனைத்திலும் ஒன்றினான் கண்ணனைக் கசிந்துருகிக் காதலித (...)

மேலும்

ஆஹா 28-Jul-2015 9:29 pm
செறிவான நடையும் கருத்தாழமிக்க வார்த்தைகளுமாக மிக அருமையான கட்டுரை . வாழ்த்துக்கள் 12-Dec-2014 9:12 am

இயற்கையோடு இணைந்திருங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு விதத்தில்
இயற்கையும் நாமும் வாழ்வோம் நலமாக நன்றாக

மேலும்

ஆம் சரியாகக் கூறீனீர்கள் 22-Feb-2014 10:57 am
மேலும்...

மேலே