எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணையாத தீக்குச்சி 

சிறு குச்சி ஒன்று எறிகிறது/
அதன் சீற்றமோ அஞ்ச வைக்கிறது/
தொட்டால் பொசுக்கும்
விட்டால் பற்றும்/
நெஞ்சத்தின் வெஞ்சத் தீயோ இது?/
அணையாத தீக்குச்சியாய்
பெண்ணே நீயுமிரு/
உன்னை நெருங்கினால் 
வெப்பத்தை கக்கு/
கருகி மாயட்டும்
கயவர் நெஞ்சங்கள்/
உன்னைக் காக்கும் கேடயம் நீயே/
துணிவை எப்போதும்
ஒளிர விடு/
அணையாத தீக்குச்சியாய் அணையாது இரு/

இவள்
எண்ணங்கள் எழுதழகி
அறூபா அஹ்லா

மேலும்

எழுந்து வா

வீழ்ந்து கிடந்தால்
வெற்றிகள் கிட்டாது/
எழுந்து வந்திடு ஏற்றங்கள் கண்டிடலாம்/
சோதனைகள் வேதனைகள் தரும்/
துவளாதே மனமே 
துணிந்து வா/
முயன்றும் முடியவில்லை 
என்றால்
முயற்சியை இன்னும் இரட்டிப்பாக்கு/
காலம் கனிகையில்
சுவைத்திடலாம் வெற்றிக் கனிகளை/
துவளாது எழுந்து வா நீ/
ஏளனமாய் சிரிக்கும் முகங்களுக்கு முன்
எட்டி நடை போட்டு
வெற்றிக் கொடி நாட்டு/

ஓயாது மோதும் அலையாய்
ஓயாது இரு/
கொட்டும் அருவி வீழ்ந்தாலும் 
வழியெடுத்து ஓடும் நதியாய்
நீயும் புது வழிகள் அறிந்து  முயற்சிகள் போட்டு முன்னேறு/

எழுந்து வா துணிந்து வா 
இலக்குகள் அத்தனையும்
அடைந்திடலாம் முன்னே வா

இவள்
எண்ணங்களின் எழுத்துக்கள்
அறூபா அஹ்லா

மேலும்


மேலே