எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரோஜாவும் தீனாவும்


காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...


கவிதையில் மலர்களை மங்கை

என்பாயே நானும் பெண் தானே...

என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....

உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...

கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...

கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..


காதலில்  நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....

சில நேரம் அவள் கூந்தலில்...

சில நேரம் அவள் பாதத்தில்....

நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.


காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில் மனங்களை கொடுங்கள்...காதல் வாழும்.


ரோஜாவை பறிக்கும் போது எல்லாம் எனக்கு இப்படிதான் தோன்றுகிறது...

ஒரு பெண்ணின் இதயத்தை பறித்து இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது போல....

ஒரு பெண்ணே இன்னொரு பெண் மீது காதல் கொள்வது போல...

தயவு செய்து ரோஜாவை வாழ விடுங்கள்.

தயவுசெய்து ரோஜாவை பறித்து விடாதீர்கள்...


#தீனா

மேலும்

நன்றி தோழி... 02-Feb-2019 1:22 pm
arumai...nan nichayam intha konathil ninithuparkavillai...vithyasamana padhivu..... 02-Feb-2019 10:21 am
பூ... (தீனா)
16-Oct-2018 10:36 pm

மங்கையின் மௌனம்..


நான் எதை கேட்டாலும் மௌனத்தையே தருகிறாயே....
 அதற்கு மரணத்தை தந்துவிடலாமே...

மேலும்

பெண்ணின் மௌனம்....

பெண்ணே என்னை மாதம் ஒருமுறை உன் மௌனச் சிறையில் போட்டு விடுகிறாய்....
 மன்னிப்பு கிடையாதா?

  ஒருவேளை கொற்கை முத்துக்கள் சிதறிவிடும் என்ற அச்சமோ....

சுதந்திர தினத்தன்று கூட மதரங்கள் மூடியே கிடக்கிறதே...
ஒருவேளை "காலாகிரகமோ"

மேலும்

மௌனம் வேண்டாம் பெண்ணே!!

காதல் அருந்தக் கேட்டேன் கானல் நீரை கையில் கொடுத்து பருகச் சொல்கிறாய்..
அழகிய காதல் தீவில் இருந்து கொண்டு என்னை வேள்வி தீயில் எரித்து விடுகிறாய்!!...
புன்னகை செய்யாமல் புருவம் தூக்கி கர்வம் கொள்கிறாய்....
உன் விழிகள் கொண்டு என் வழிகள் மாற்றிவிட்டாய் உன் வாய்மொழி தான் சொல்வாயோ!!....
மௌனம் வேண்டாம் பெண்ணே விழி  அசைத்து விடு போதும் கண்ணே!!..

மேலும்

உன் நினைவுகள்!!

என் கண்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறது.. ஆனால்  என் நினைவுகள் உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறது....


மேலும்

அழகிய முகம்


அழகிய சந்திர கிரகணம்!!... 
உன் கூந்தல் விழுங்கிய உன் முகம்.

மேலும்

ஈர்க்கும் விழி இமைகள் வைத்து 
இதயம் ஊடுருவி காயம் செய்கிறாய்...
பார்க்கும் பால் விழிகள் மறைத்து வைத்து பார்க்காமலே பறந்து செல்கிறாய் ......
உன் உயிரைத் தராமல் உள்ளத்திலே என் உதிரத்தை உறையச் செய்கிறாய்..
மௌனம் வேண்டாம் பெண்ணே!!
விழி அசைத்துவிடு போதும் கண்ணே!!

மேலும்


மேலே