எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்பிக்கை மரம்

 கற்பக மரத்தைதான் மக்கள் நம்பிக்கை மரம் என்று சொல்கிறார்கள்.

கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் என்பது இந்து சமய நம்பிக்கைபடி தேவ லோகத்தில் இருக்கும் ஒரு கற்பனை மரமாகும்.

கற்பக மரத்திற்கு நம்பிக்கை மரம், கல்ப தரு, கல்ப விருட்சம், கற்பக விருட்சம் என்ற பெயர்களும் உண்டு.

இம்மரம் இந்திரனை அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.

பூலோக கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்பெருகிறது.

மேலும்

பிறக்கப்போவது ஆனா?? பெண்ணா???

ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம்மாளுங்க பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்...

நீங்களும் சோதித்துப் பாருங்கள்..

குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.

இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.

இந்த அ (...)

மேலும்

இது உண்மைதான் ,,நான் பாத்து இருக்கேன்,,,நன்றி தோழமையே 06-Dec-2014 8:43 am

கிரிக்கெட் போட்டியின் போது தலையில் அடிபட்ட ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹுக்ஹெஸ் (Phillip Hughes) இன்று மருத்துவமனையில் இறந்தார்..


மேலும்

எபோல வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மனிதர்களை கையாளும் ஊழியர்கள்

மேலும்

* எய்ட்சும் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்தது! ** இதுவும் அங்கிருந்துதானா? .... 19-Aug-2014 11:42 am



பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
-------------------------------------------
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு

வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே
வருவது போவது ஒருமுதுகூனு

மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகல என்று மலசலம் வந்து

கால்வழி மேல்வழி சாரநடந்து
கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து

பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு

மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து

மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து

கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்

உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே....

-------------------------------------------
ஒவ்வொரு வரியும் விளக்கினால் நன்று....

மேலும்

மிக அருமையான இரசனை தோழரே 02-Sep-2014 4:19 pm
நன்றி........ 12-Aug-2014 10:16 am
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து......................................................பிறப்பு முன் உருவாக்கத்திலிருந்து இறப்புவரை ...வாழ்க்கை....கதை .....பிரமாண்டம் . 11-Aug-2014 9:44 pm
ஞானம்... 11-Aug-2014 8:40 pm

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப் (...)

மேலும்

காந்தியின் எளிமையுடன் ஒரு பெரும் பணக்காரர் . ஆச்சரியம் ! அருமையான பகிர்வு . ----அன்புடன், கவின் சாரலன் 25-Jul-2014 7:25 pm

முதல் முயற்சியில் படத்தில் ஒளிந்திருக்கும் சரியான வார்த்தையை கண்டுபிடி...!!!

மேலும்

இதற்கு பெயர் illusion therapy 18-Jun-2014 9:45 pm
Bad Eyes 18-Jun-2014 1:48 pm

வைரமுத்துவின் ஆயிரம் தான் கவி சொன்னேன் | அம்மா கவிதை | Vairamuththu mothers day கவிதை

மேலும்

மற்றவர் மத நம்பிகை மதிப்போம் | respect the religious believes of others

மேலும்

மேலும்...

மேலே