எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அப்பா !
..........
5 வயதில் ஹீரோ
10 வயதில் நண்பன்
20 வயதில் வில்லன்
30 வயதில் காமெடியன்
40 வயதில் நல்லவன்
50 வயதில் ஹீரோ
மனசு
..................
மனசு அமைதியில்லை .எதோ ஒன்றுக்காய் ஏங்குகிறது . அது என்னவென்று எனக்கும் தெரியவில்லை எங்கும் மனதிற்கும் தெரியவில்லை .மனதின் அழுத்தம் மூளையை தாக்கி சிந்தனையை குழப்புகிறது .மனதின் ஆசைகளுக்கு எல்லையில்லை .அதை என்னால் ஆள முடியவில்லை . அது என்னை ஆளுகிறது .அதற்கு அடிமைப்படுகிறேன் .
சில நேரம் விலங்கை உடைத்து வெளியே வந்து மனதை வெல்லுகிறேன். வென்ற தருணங்களை விட தோல்வி அடைந்த தருணங்களே அதிகம் .
என் மூளை வேண்டாம் என்பவைகளை மனசு செய்யத் துடிக்கின்றது .
தியாகத்தின் மறு உருவம்
..................................................
ஒரு முறை அன்னைத் தெரேசா பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று
ரொட்டித் துண்டுகளை வழங்கினார் . நன்கு பசித்தவர்களுக்கு உணவு வழங்கினால்
உடனே சாப்பிடவே ஆசைப்படுவார்கள் . ஆனால் அந்தத் தாயோ மிக வேகமாக
அந்த இடத்தை விட்டு ஓட எத்தனித்தார்.
அவரை ஓட விடாமல் தடுத்த அன்னைத் தெரேசா , "சாப்பிடாமல் எங்க போறீங்க ...."
என் வினவினார் . அதற்கு அந்த தாய் , "அம்மா ! நானாவது பரவாயில்ல ரெண்டு
வேலைதான் பட்டினி , ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி
தன்னோட இளம் குழந்தைகளுடன் இரண்டு நாளா பட்டினி கிடக்குறாங்க (...)