எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் புயல்…

நெற்றின் சிவன் நீறு – நெஞ்சக்
கூட்டினுள் அவன் எண்ணம்
பெற்றவருற்ரவரெல்லாம் - எனை
பேயனிவனென வைத்தவள் அவள்.

தெருவிற்குப் பெருமை சொன்னேன்
தேன் நிலவென பிறையைச் சொன்னேன்
கற்றுவைத்த கல்விதனில் - அவளைக் கவி வடித்து
புகழ்ந்து சொன்னேன்.

பாட்டொலி உந்து சக்தி –புதுப்
பாற்பொங்கல் தேனமிர்தம்
காட்டுக்குயிற் கானமது – என்
கனியவளின் கதை வடிவம்.

தோற்றத்தில் ஏழையவள் - என்னால்
தோட்டத்து மலரானால்
நான் மட்டும் பார்கயிலே – அவள்
நாணமது மயில் வடிவம்.

கனவுக்குள்ளே கண்ணசைக்கும் - அவள்
கை விரல் நுனியைத்தொட்ட
அன்றுதான் உணர்ந்து கொண்டன் - என்
கற்பனைக்குச் சொந்தக்காரி காட்டுப் புயல் (...)

மேலும்

புயலுக்கு பின் அமைதி தானே ... 21-Jan-2015 1:42 pm

மேலே