எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் மனம் எல்லாம்
நீதான் பெண்ணே
அதற்காக --உன்
மனம் எனக்கு வேண்டாம் --அதில்
சிறு இடம் ஒன்று போதும்
தந்து விடு
தவிக்கவிடாதே..........!
மயக்கும் அவள் கண்களை
ரசிக்கிறேன் --நான்
மயக்கமடைந்து கொண்டே ............
படிக்காத அவள் உறவும்
பழகாத அவள் நட்பும்
புரியாத அவள் புன்னகையும்
----------அழகு தான் -
---------என் பார்வையிலே !
கவலை மறந்து உன்னைப் பார்க்கிறேன்
கவலை வந்தது -உன்னைப் பார்த்ததால் தான்
என்னைக் கொஞ்சம் பார்க்க விடு -உன்
கண்ணைக் கொஞ்சம் நோக்க விடு -மறந்து விட்டாயோ
என்னை நீ காணாமல் இருந்தபோது -நீ
பட்ட துன்பங்களை-மறந்து விடாதே
என் நினைவுகளை -என்றும்
நினைத்திரு என்னை -எப்போதும்
ரசித்திருப்பேன்
நின் கண்ணை ...!
இத்தனை நாட்களாக என்னைப் பார்த்த அவள் கண்கள்
ஏனோ சில நாட்களாக பார்க்க மறுக்கிறது -ஆனால்
என் கண்கள் மட்டும் அவள் வீட்டை நோக்கியே .....!
இத்தனை நாட்கள் கற்பனையில்
அவளிடம் பேசிய எனக்கு
அன்று கனவில் பேச
ஒரு வாய்ப்பு கிடைத்தது
சுற்றி இருப்பவர்கள் களைந்து சென்ற பின்
அவள் அருகில் சென்ற போது
அடித்து எழுப்பி விட்டான் -என்
அருமை நண்பன் -அவன்
அன்புக் கரத்தால்
காரணம்
காலை எழு மணி ஆகி விட்டதாம்!
மகிழ்ச்சி---
மனிதனின் வாழ்வில் என்றும் நிலையில்லை
துன்பம் --
துணிவுடன் இருந்தால் தூரம் செல்லும்