எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எத்தனை உறவுதனில்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
அத்தனை உறவுகளில் -எனை
மொத்தமாய் கோர்த்து விட்டாய்
அன்பு எனும் ஒரு புன்னகை
கடல் கடந்து ஒலிக்கின்றது
செவிகளின் ஓரம் அல்ல இதயத்தின் ஓரம்
உன் நினைவுகளாக
கண்களோடு வாழும் காதல்
கண்முடினாலும் வாழும் நினைவுகள்
என்றும் இனித்திடும் இனிமைகள் தான் .......
கவிதையொன்று கவிதையானது காயங்களின் உருவில்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
அன்பெனும் உறவு இருந்தால் ~~~
ஆறுதல் என்ற குரல் இருக்கும் ~~~
ஆறுதலின் குரல்
உன் குரலாக இருந்தால்
என் கண்ணீரின் பொருளும் உன்னிடம் தான்
ஏனெனில் நீதானே !
எனை முழுமையாய் புரிந்த பின்
எனை எறிந்து சென்றாய் ~~
என் விழிகளின் அகராதியை படித்த
உனக்குத்தானே ..
என் கண்ணீரின் இலக்கணம் தெரிந்திருக்கும்
அவை ஒன்றும் கானல் நீர் அல்ல
உன் காதல் தந்த காயத்தின் நீர் என்று ~~~~
உன்னை தொலைவில் தானே
அனுப்பிவிட்டேன்
என் விழிகளுக்கு அப்பால்
இதயத்துக்கு
இன்று என் இதயம்
இடைஞ்சலாக இருக்கின்றது என்று
என் நிழலையும் விட்டு பிரிந்து சென்றாய்
தளிர் விடும் மரமாய்
நிழல் தரும் பொருளாய்
நம் வாழ்க்கை ....
வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று மட்டுமே
எண்ணுங்கள் !!!
எண்ணுவதெல்லாம் பொன்னாய்
விளைவது எல்லாம் நெல்லாய்
வயிறு நிறையாவிட்டாலும்
மனது நிறைந்து விடும் !
ஹா ஹா :)
** *2015*2015*2015*2015* **
"இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
அன்புடன் கீர்த்தி (KP )
அனைத்து தோழமைக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .....
இரவே நீ வரும் போது -ஒரு
நிம்மதியான விடியலை கொண்டு வா...
நினைவை மறக்கும் இதயத்துக்கும்
நினைவுகளை நினைக்கும் இதயத்துக்கும்
நிம்மதிக்கு அலையும் இதயத்துக்கும்
நிசப்தமான விடியலை
விழிகளில் தந்து விடு !
இரவு வணக்கம் !
பார்த்ததில் பிடித்தது !