எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பார்த்ததில் பிடித்தது.
அருமையான பதிவு..இறப்போம் என தெரிந்து வாழ்ந்தால் தப்புகள் செய்வது குறையும்.. 20-Oct-2014 5:08 pm
( என் வலி சொல்லும் பாடல் வரிகள். இயற்கை திரைப்படம். )
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு!
உலகம் முழுதும் சொந்தமானதே
காதல் வந்த பின்பு!
சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு!
சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு!
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு!
இன்று அத்தனை உறவும்
மொத்தம் காண்கிறேன்
உன்னைக் கண்ட பின்பு!
இன்னும் என் பயணமோ
தொடங்கவே இல்லை!
அதற்குள் அது முடிவதா ?
விளங்கவே இல்லை !
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்!
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கடலில் கரைந்தே கிடக்கிறேன்!
சுட்ட மண்ணிலே ம (...)
நல்ல பாடல்... நானும் ரசித்து கேட்டதுண்டு... 18-Oct-2014 2:08 pm
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே
வாடுதடி!
கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி! அருமை !-இயற்கையில் உணர்வுகளை உடைத்து,உயிரை திறக்கின்ற காதல் வரிகள் ........
18-Oct-2014 10:43 am
காதல். அனுபவம் மட்டும் சொல்லித் தரும் பாடம். என் காதல் சொல்லப்படாமல் தொலைந்தது .இந்த பாடலின் வரிகள் மனதை தாலாட்ட எனை மறந்து உறங்கிய தருணங்களே வழக்கமாகிப் போனது. காதலித்த அனைவருடனும் பகிர்கிறேன் . இந்த உயிர் துடிப்பான வரிகளை (வலிகளை) 18-Oct-2014 9:15 am