எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் ஆண்ராயிடில் கனெச்சன் ஸ்லோவா இருக்கு? எப்படி வேகம் அதிகரிப்பது?
என்னிதயத்தில் மலர்ந்த எழுத்துதள தோழமைகளே!
நீண்ட இடைவெளிக்கு பின்
சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி!
புதிதாய் முளைத்த புதுகவிஞர்களே! இனி என் கருத்துகளையும் தங்கள் கவியில் காண முடியுமென்பதை மிக்கமகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்!!
என்றும் அன்புடன் கனகரத்தினம்
ஆண்ட்ராய்டு உலாவியில் அடுத்தவரின் படைப்புகளுக்கு கருத்துரையோ அல்லது மதிப்பினை தந்திட வழிமுறை விளக்கிட வேண்டுகிறேன்!
அட கவிதைக்கு கருத்து போட மனமில்லாட்டியும் காணும் குறையையாவது சொல்லிபோங்க !இப்படி மௌனமாய் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து போனால் நாங்க உங்களை என்னனு நினைக்கிறது .மௌனசாமியாருனா இல்லை பொறாமைகொண்ட மனிதரென்றா ? தலைகனம் பிடித்தவரென்றா? இப்படி தாங்க பல கவிஞர்கள் தனக்குள்ளே பொலம்புராங்க ! பார்வை நிறைய ஆனால் கருத்து 0 அதுக்கு என்னங்க அர்த்தம் ?அடமதிபெண்ணுனு ஒன்னு சொல்வாங்களே அது எதுக்குனே தெரியலைங்க ?நல்லகவிதைனா ?இல்லை பொழச்சி போங்கண்ணா ? கொஞ்சம் தலத்தில் உள்ள கவிதை பக்கத்தை திருப்பி பார்த்தால் உண்மை தானே தெரியுமுங்க !
நிலா பிம்பமாய் அவள்
அவளது ஒளியில் தவழும் மேகமாய் நான்
சிதறல்கள் அவள் சிரிப்பு-என்
பதறல் யாதெனின் அவள் வனப்பு
கடைவிழியில் காந்தம் வைத்தால்
இடைவழியே கட்டிவைத்தால்
நகர்வறியாது கிரகணத்தின் பிடியில்
வெண்கல உலக்கையாய் நான் !
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t34.0-12/p296x100/10984726_611456578989971_1452009031_n.jpg?oh=e6adcbe2a6263db1ecd88f893c91c0c4&oe=54E12B08&__gda__=1423967031_d486dc3e099a8d3ba813d662092355f4
என்னமோ தெரியலை !எண்ணமே வரவில்லை
கண்ணமோ கவிதையோ ஒண்ணுமே புரியலை
கணினிக்கு முன் வருவதற்கு முன்வரை
சொல்லடை சிலேடையாக துள்ளும் மனதுக்குள்
ஒவ்வொன்றாய் செதுக்க நினைக்கையில் ஒண்ணுமே வரவில்லை
மொத்தமாய் வந்து ஸ்தம்பிக்குது! மனம் மட்டும் தும்பியாய் அலையுது
மாறிடும் பருவநிலை போல் காரிருள் சூழ்ந்தே காட்சியாய் தெரியுது !
ஆதலால் கவிதைக்கு சில மணித்துளிகள் ....மின்வெட்டு !
குடியரசு நாடு
குடிமக்களுக்கில்லை வீடு?
குடிநீர் தீர நதியை இணைத்தாரா ?
குடிமக்கள் வாழ நல் வழிதான் வகுத்தாரா ?
குடியை பெருக்கி குடிலை மறந்தாரே !
கொடியை ஏற்றி குடியரசென்றால்
குடித்தனம் விளங்குமா ?
குட்டிதூக்கம் போடும் கூட்டம் விழிக்குமா ?
குள்ளநரித்தனம் செய்யும் அரசியல் சாயம் வெளுக்குமா ?
குணமில்லை பணமென்ற இழிநிலை மாறுமா ?
குறட்டை விடும் குடிமக்கள் விழித்தால் விடியும்
கொடியும் கம்பத்தில் ஏறி பட்டொளி வீசி பறக்கும்
அந்நாளே பாட்டாளிகளின் குடியரசாகும் !
பிறர் கருத்தை ஏற்காத போது
பின் வாழ்வில் கேட்காது -காது
முன்வந்து முடம் நின்றால்
முன்வந்து கருதுரைப்பவனும் ஜடமே !
காதல் வைரஸ் பரவிய கணினி
துடிக்குது கிடந்து இதயத்துள் !
அறிவுள்ளவன் பிறர் சொல்லை மூளையில் பதிப்பான்
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் மூலையில் கிடப்பான்
நான் ரசித்ததில் பிடித்த பாடல் ...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….
கருணை பொங்கும் … உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு …
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம் …
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு …
பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. ஒ . (...)